“இரண்டு நாள்ல இரண்டு செட் மக்கள் இதையே சொல்லி இருக்காங்க. அவங்க சொன்ன இடத்துல போய் பார்த்தா அசால்ட் வெப்பன் மாதிரி எதுலயோ சுட்ட அடையாளம் வேற இருக்கு!”
“ஹையோ!”
“அதான் சுத்தி இருக்க எல்லா ஊர்லேயும் ஹை அலர்ட்ல இருக்க சொல்லி இருக்காங்க. இது நம்ம ஊர்ல நடந்திருக்கதால சீக்கிரமா என்னன்னு கண்டுப் பிடிக்கனும். இவங்க சொன்ன அடையாளம் வச்சுப் பார்த்தா ட்ரோன் (drone) மாதிரி இருக்கு. ஆனால் அதுல எதுக்கு துப்பாக்கி மாதிரி ஆயுதம்? அதுவும் ஏன் இங்கே??? மதியூர்ல ட்ரோன் வச்சு யார் என்ன செய்றாங்க??”
“ட்ரோன்’னா என்னங்க?”
சத்யா கேட்ட கேள்விக்கு சக்தி விளக்கம் கொடுத்தாள்!
“சின்ன சைஸ் ஆளில்லா விமானம் சத்யா. ஆக்ச்சுவலி மிலிட்டரில யூஸ் செய்துட்டு இருந்தாங்க. இப்போ அதுவே ஒரு ஹாபி மாதிரி மாறிப் போயிடுச்சு. பல்லாயிர அடி உயரத்துல இருந்து போட்டோ எடுக்க, விளையாடன்னு எல்லாம் யூஸ் செய்றாங்க! ரியல் எஸ்டேட் மாதிரி நிறைய இன்டஸ்ட்ரீஸ்ல இது ரொம்ப யூஸ்ஃபுல்லாவும் இருக்குன்னு சொல்றாங்க!”
சக்தி பேசிய போது தான் அவள் அங்கே இருப்பதே தென்றல்வாணனுக்கு ஞாபகம் வந்தது. அவனுடைய முகத்தை பார்த்தே அவன் மனதில் ஓடும் எண்ணத்தை சக்தி புரிந்துக் கொண்டாள்.
“உங்க கேஸ் பத்தி நான் யாரு கிட்டேயும் சொல்ல மாட்டேன் தேன். கவலைப் படாதீங்க. நான் சொல்ற ஒருத்தரை நீங்க போய் பார்த்து பேசுறது இந்த கேஸ்ல உங்களுக்கு ஹெல்ப் செய்யலாம். அவர் பேர் வினாயக்!”