”அப்ப அந்த சின்ன குழந்தையோட எலும்புகூடு“
”அது பிறந்த குழந்தையோட எலும்புக்கூடுன்னு லேப்ல சொன்னாங்க, கூடவே ஒரு பொண்ணோட எலும்புகூடும் இருக்கு, ஒருவேளை அந்த பொண்ணோட குழந்தையாதான் இருக்கனும், சரியா சொல்ல முடியலை அகத்தியன் ரொம்ப வருஷங்களாயிடுச்சி முழு விவரம் எதுவும் அகப்படலை”
”இப்படி சொன்னா எப்படி சார், அத்தனை எலும்புகூடுகளும் எங்க வீட்டு தோட்டத்துல எப்படி வந்தது“
”அதை நீங்கதான் சொல்லனும்”
”என்னது நானா எனக்கெப்படி தெரியும்”
”உங்க தாத்தாகிட்ட நாங்க விசாரனை செய்யனும்”
”எதுக்கு அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”
”இதைப்பாருங்க, நாங்க ஊருக்குள்ள விசாரிச்ச வரைக்கும் அந்த ஆண்களோட எலும்புகூடுகளை வைச்சி சிலர்கிட்ட கேட்டப்ப உங்க தாத்தாவோட கூட்டாளிகளா இருக்கலாம்னு சொன்னாங்க“
”யார்கிட்ட கேட்டீங்க“
”கீழவீதியாளுங்க கிட்ட கேட்டோம்”
”என்னது கீழவீதியா ஆனா எங்க தாத்தா கீழவீதி கிடையாது” என சொல்ல காவல் அதிகாரி கலகலவென சிரித்துவிட்டு