ஆட்டினார்.
”முதல் கேள்வி எத்தனை வருஷமா இந்த வீட்ல நீங்க இருக்கீங்க” என கேட்டதும் சங்கமேஸ்வரன் அதிர்ந்து நாச்சியாவை பார்க்க அவளோ மென்மையாகச் சிரித்தாள். அவரோ அதிகாரியிடம்
”ரொம்ப வருஷமா” என்றார் உடனே அடுத்த கேள்வியை இன்னொரு அதிகாரி கேட்டார்
”அதுக்கு முன்னாடி நீங்க எங்க இருந்தீங்க“
”நான் கீழவீதியில இருந்தேன்”
”கீழவீதியில இருந்த நீங்க எப்படி இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வந்தீங்க“
”அதுக்கு நான் காரணம் இல்லை அப்ப இருந்த ஆவுடையப்பன்தான் என்னை அவர் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைச்சாரு, அதுக்கு அப்புறம் இருந்து நான் இங்கதான் இருக்கேன்”
”எப்படி உங்களுக்கு தன் பொண்ணை கல்யாணம் செய்து வைச்சாரு ஆவுடையப்பன் அதுக்கு வலுவான காரணம் இருக்கனுமே இல்லை ஏதாவது காதல் கீதல்னு”
”ஆமாம் நானும் ஆண்டாளும் காதலிச்சோம்”
”அந்த எலும்புகூடுகளை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க”
”அது யாரோடதுன்னு எனக்குத் தெரியாது, நான் வர்றதுக்கு முன்னாடியே இந்த வீட்ல ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாம், அது என் மாமனார்க்குதான் தெரியும்”
”யார் மேலயாவது உங்களுக்கு சந்தேகம் இருக்குதா”
”இருக்கு“