நாம பைத்தியமாயிடுவோம்” என சொல்ல இருவரும் கிளம்பினார்கள். வீட்டை விட்டு வெளியே வர அங்கு வயதில் பெரியவர்கள் ஆண் பெண் வித்தியாசமின்றி கைகூப்பி பணிவாக நின்றிருந்தார்கள், அவர்களைக் கண்டதும் இவர்களுக்கு திக்கென்றது. யாரும் எதுவும் பேசவில்லை வந்தவர்கள் உடனே கலைந்து சென்றார்கள். அதைக்கண்ட நாச்சியா
”அகத்தியா என்ன நடக்குது இங்க ஏன் இவங்க இப்படி நடந்துக்கறாங்க“
“நாம அகத்தியன் நாச்சியா சாயல்ல இருக்கறதால நமக்கு மரியாதை செய்றாங்க”
”அவங்க ஏன் எதுவும் பேசலை“
“நாமளும்தானே பேசலை“
”அதான் ஏன்“
”தெரியலை முதல்ல நாம இங்கிருந்து கிளம்பறது நல்லது” என சொல்லி அவளை அழைத்துக் கொண்டு வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான்.
இருவருமே வெவ்வேறு ஆசிரமத்தில் வளர்க்கப்பட்டார்கள் அதனால் ஆசிரமத்தில் இருவரும் விசாரித்த போது பொதுவாக அம்பேத்கார் நகர் என்றே சொன்னார்கள், அதைக்கேட்டு குழம்பிய இருவரும்
”நாம ரெண்டு பேருமே அம்பேத்கார் நகர்ல பிறந்திருக்கோம் இது எப்படி சாத்தியம்”
”தெரியலை நாச்சியா இப்பதான் இந்த கேஸ் மேல எனக்கு ஆர்வம் அதிகமாகுது, இந்த கேஸ் முடியறதுக்குள்ள என்னோட பிறப்பின் ரகசியத்தை நான் தெரிஞ்சிக்குவேன்னு தோணுது”
”அகத்தியா எனக்கொரு சந்தேகம்“
”என்ன“