கிட்ட சொல்லு," என்றாள் கலைவாணி!
"சரி அத்தை!" ஐஸ்வர்யா சம்மதிக்க, ப்ரியம்வதா கோபத்துடன் அங்கிருந்துப் சென்றாள்.
இரண்டே நிமிடங்களில் கலைவாணி ப்ரியம்வதாவை தேடி வந்தாள்.
"ப்ரியா!"
ப்ரியம்வதா பதிலும் சொல்லவில்லை. திரும்பியும் பார்க்கவில்லை.
"ப்ரியா, நான் இன்னைக்கு வரைக்கும் உன்னை எதுலேயும் கட்டாயப் படுத்தினது இல்லை. ஆனால் அந்த வினாயக் விட்டு நீ தள்ளி இருக்குறது நல்லதுன்னு எனக்கும் தோணுது."
ப்ரியம்வதாவால் இப்போது அமைதியாக இருக்க முடியவில்லை!
"என்னம்மா, நீங்களும் இப்படி பேசுறீங்க? அவர் கிட்ட நீங்க பேசி இருக்கீங்களே. வினாயக் இதெல்லாம் செய்ய மாட்டாரும்மா!"
"சரி, நீ சொல்றது உண்மைன்னே இருக்கட்டும். இப்படி, எப்போ என்னன்னு கேள்வி இல்லாம காணாம போறவரை என்னன்னு சொல்றது? அவருக்கு மன நோய் ஏதாவது இருக்கோ என்னவோ?"
"அதெல்லாம் இல்லைம்மா!"
"இல்லாம இருந்தா நல்லது தான் ப்ரியா. அதுக்காக நீ ராகுல் கல்யாணம் செய்துக்கப் போறவக் கிட்ட இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசுறது சரியில்லை."
கலைவாணி சொல்ல வந்ததை சொல்லி விட்டு சென்றப் பிறகும் 'அவருக்கு மன நோய் ஏதாவது இருக்கோ என்னவோ?' என்று அவள் கேட்ட கேள்வி ப்ரியம்வதாவின் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது!