வேறு யாருமே அவளை இப்படி செல்லமாக எல்லாம் அழைத்தது கிடையாது.
ப்ரியம்வதா இனிய அதிர்ச்சியில் அமைதியாக இருக்க, வினாயக்கின் மொபைல் சத்தம் போட்டு அழைத்தது. அவன் ஃபோனில் பேசட்டும் என்று அங்கே இருந்து விலகி வினாயக் உருவாக்கி இருந்த சைபோர்க்கை கவனமாக பார்த்தாள் ப்ரியம்வதா.
இரண்டே நிமிடங்களில் அவளிடம் வந்தான் வினாயக்.
"சப் இன்ஸ்பெக்டர் அபினவ் பேசினார். என் மொபைல் ரீச் செய்ய ட்ரை செய்துட்டே இருந்தாராம். நான் எனக்கு தெரிஞ்சதை சொன்னேன். போலீஸ் ஸ்டேஷன் வர சொல்லி இருக்கார்."
"ஸ்டேஷனுக்கா? எதுக்கு வினாயக்?" ப்ரியம்வதா பதற்றத்துடன் விசாரித்தாள்.
"பயப்பட ஒண்ணுமில்லை ப்ரியூ. அந்த ட்ரோன் பத்தி அவங்களுக்கு விபரம் வேணுமாம். என்னை ஹெல்ப் செய்ய சொல்லிக் கேட்டார்."
ப்ரியம்வதாவிற்கு அதை நம்ப முடியவில்லை. ஆனால் அதை விட வினாயக் அவளை மீண்டும் ப்ரியூ என்று அழைத்தது மனதை கவர்ந்தது. அதனால் எதுவும் சொல்லாமல் இருந்தாள்.
"அரை மணி நேரத்துல ஸ்டேஷன் வரேன்னு சொல்லி இருக்கேன் ப்ரியூ. நான் குளிச்சுட்டு கிளம்புறேன். நீ பத்திரமா இரு. ஒன் ஹவர்ல வந்திருவேன்னு நினைக்கிறேன்."
ஒரு மணி நேரம் என்று சொல்லி சென்ற வினாயக் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து திரும்ப அரை நாளுக்கும் மேலே ஆனது.
திரும்பி வந்தவன் சில நிமிடங்களில் ப்ரியம்வதாவை தேடி கையில் சில பேப்பர்களுடன் வந்தான்.