🌼🌸❀✿🌷
அடுத்த நாள் காலை குழப்பம் அப்பிய முகத்துடன் வினாயக் வீடு திரும்பினான்!
அவனைப் பார்த்த உடன் மனதில் இருந்த கவலைகள் மறைய அவனை இறுக அணைத்துக் கொண்டாள் ப்ரியம்வதா.
சென்ற முறைக்கு இந்த தடவை அவளுடைய அணைப்பின் இறுக்கம் அதிகமாக இருந்ததாக வினாயக்கிற்கு தோன்றியது.
மனசுக்குள் அணைப்பின் இறுக்கம் பற்றிய கேல்குலேஷன் போனாலும், அவனுக்கு ப்ரியம்வதாவின் அந்த அணைப்பு சுகமாகவே இருந்தது. குழம்பி போயிருந்த அவனுடைய மனதிற்கு தெளிவு திரும்புவதாக உணர்ந்தான்.
ப்ரியம்வதாவே அவனை விடுவிக்கும் வரை வினாயக் அவளின் அணைப்பை தன்னை மறந்து அனுபவித்தான்!
"ஏன் இப்படி நடக்குதுன்னு ஒன்னும் புரியலை ப்ரியம்வதா. இதுவரைக்கும் எனக்கு இப்படி நடந்ததே கிடையாது. எப்படி அங்கே போனேன்னு எனக்கு ஞாபகமே இல்லை. ஜேக்கில் அன்ட் ஹைட் மாதிரி எனக்கு ஏதாவது ஆயிடுச்சா? இல்ல எனக்கு ஸ்பிலிட் பர்சனாலிட்டி ஏதாவது வந்திருக்குமோ?" வினாயக்கின் பேச்சில் கலக்கம் இருந்தது.
"வினாயக், அப்படி எல்லாம் இருக்காது. நாம ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்ட் பார்த்து கன்சல்ட் செய்வோம். இந்த தடவையாவது வேண்டாம்னு சொல்லாதே. என் பேச்சைக் கேளு," என்றாள் ப்ரியம்வதா.
"இல்லை ப்ரியூ, வேண்டாம்!"
வினாயக் அவளை அழைத்த விதத்தில் ப்ரியம்வதா வாயடைத்துப் போனாள். இதுவரை அவன் அவளின் பெயரை சுருக்கி அழைத்ததே இல்லை. சொல்லப் போனால் கலைவாணி தவிர