நல்ல வேளையாக அப்போது வீட்டில் ராகுலும், ஐஸ்வர்யாவும் இல்லை. கலைவாணியும் ப்ரியம்வதாவும் மட்டும் இருந்தார்கள்.
"ப்ரியூ, இதுல சைன் போடு," என்றான் வினாயக்.
"சைனா? எதுக்கு வினாயக்?" ப்ரியம்வதா புரிந்துக் கொள்ள முடியாமல் கேட்டாள்.
"என்னோட கண்டுப்பிடிப்புகள், பேடன்ட்ஸ் எல்லாம் எனக்கு அப்புறம் உனக்கு தான்னு லீகலா ஃபைல் செய்யப் போறேன். அதுக்கு தான் சைன் போட சொல்றேன்."
ப்ரியம்வதா அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துப் போனாள். வினாயக் தொடர்ந்து பேசிக் கொண்டே போனான்.
"அம்மா இருக்காங்க. அம்மாவை சாட்சியா கையெழுத்து போட சொல்லலாம். எனக்கு ஏதாவது ஆனா என்னுடையதுன்னு நான் வச்சிருக்க எல்லாத்தையும் என்ன செய்றதுன்னு நீ தான் யோசிச்சு முடிவு செய்யனும். என் அளவுக்கு நீ மட்டும் தான் அதை எல்லாம் நல்ல விதமா பார்த்துப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. எனக்காக இதுல சைன் போடு ப்ரியூ!"
"வினாயக், இது எல்லாம் இப்போ எதுக்கு?" ப்ரியம்வதாவிற்கு அவன் சொன்ன 'எனக்கு ஏதாவது ஆனா' பகுதி இதயத்தை குத்தி கிழித்திருந்தது.
"கேள்வி கேட்காம சைன் போடு ப்ரியூ," வினாயக் அவள் கையில் வலுக்கட்டாயமாக பேனாவை திணித்தான்.
ப்ரியம்வதா எதையும் படிக்காமல் கையெழுத்து போடுவதை யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் கலைவாணி.
🌼🌸❀✿🌷
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்