“வினாயக் பொதுவா நல்லவரா இருக்கலாம். ஆனால், சம்டைம்ஸ் மனிதர்களின் முகம் மாறுவது உண்டு. அதும் நீங்க சொன்னவர் ஒரு சையன்டிஸ்ட். அவரே சொன்ன மாதிரி ஜேக்கில் அன்ட் ஹைட் மாதிரி அவர் மாறிப் போயிருக்கிறது கூட சாத்தியம் தான்.”
“அது யாரு சக்தி அந்த ஜேக்கில் அன்ட் ஹைட்??” என்றாள் சத்யா புரியாமல்!
“ஜேக்கில் அன்ட் ஹைட் ஒரு பாப்புலர் இங்கிலீஷ் கதை சத்யா. ஒரு நல்ல டாக்டர் இருப்பார். அவர் கண்டுப்பிடிச்ச மருந்து ஒன்னை குடிக்கும் போதெல்லாம் அவரே கெட்டவரா, மான்ஸ்டர் போல மாறிடுவார். டாக்டரா இருக்கும் போது அவர் பேரு ஜேக்கில், கெட்டவரா மாறும் போது ஹைட். டாக்டரா இருக்கும் போது நல்லது செய்து எல்லோருக்கும் ஹெல்ப் செய்றவர், ஹைடா மாறும் போது ரொம்ப மோசமா நடந்துப்பார்... கொலை கூட செய்வார்...”
“ஹம்மா! கதை பயங்கரமா இருக்கு,” என்றாள் சத்யா முகத்தை சுழித்துக் கொண்டே!
சத்யாவின் ரியாக்ஷன் பார்த்து சிரித்து விட்டு, ப்ரியம்வதாவிடம் தன் பேச்சை தொடர்ந்தாள் சக்தி.
“ஒருவேளை நாங்க இந்த் கேஸ் எடுத்து, வினாயக் கெட்டவர்னு தெரிய வந்தா, அதை நாங்க போலீஸ் கிட்ட சொல்லி தான் ஆகனும் ப்ரியம்வதா. உங்களுக்கு அது புரியுது தான?” சக்தி உறுதியான குரலில் ப்ரியம்வதாவிடம் கேட்டாள்.
“நீங்க சொல்றதை எல்லாம் பார்த்தா உங்களுக்கும் வினாயக் மேல நம்பிக்கை இல்லைன்னு தெரியுது,” என்றாள் ப்ரியம்வதா வருத்தத்துடன்.
”நம்பிக்கை இருக்கு, இல்லைன்னு எதுவும் இல்லை ப்ரியம்வதா. பட் வினாயக் கடந்து வந்த பாதையினால அவர் மாறி இருக்க வாய்ப்புகள் இருக்கு. நல்லவன் ஒருத்தனை ஒரு தடவை அடிச்சா தாங்குவான். இரண்டு தடவை, மூணு தடவை, ஓகே! அதுக்கு அப்புறம் ஒன்னு திரும்ப அடிப்பான் இல்லைனா தன் இயலாமையை, கோபத்தை மறைமுகமா திருட்டுத் தனமா காட்டுவான்!”