“நாங்க உங்க வீட்டுக்கு வந்து உங்க அண்ணா, அம்மா, ஐஸ்வர்யா, ஸ்ரீனிவாஸ் கூட எல்லாம் பேசலாமா?” என வினவினாள் சக்தி.
“பேசலாம். இன்வெஸ்டிகேட்டர்ஸ்ன்னு வேண்டாம். என் ஃப்ரென்ட்ஸ்ன்னு சொல்லுங்க. வினாயக் கிட்ட கூட நீங்க பேசலாம். நானே உங்களை அறிமுகம் செய்து வைக்கிறேன்.”
“ஷுயர்! வினாயக்கை எனக்கே தெரியும். அவர் சென்னைல இருந்தப்போவே எனக்கு அவரோட பரிச்சயம் இருக்கு!”
“அப்போ வசதியா போச்சு. வினாயக்கோட ஃப்ரென்ட்ன்னு கூட நீங்க எல்லோர் கிட்டேயும் சொல்லலாம்!”
“ரைட்! அன்ட், உங்க பழைய கம்பெனி இப்போ எப்படி போகுது? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”
“கொஞ்சம் தெரியும். என்னோட பழைய கொலீக்ஸ் நிறைய பேர் இன்னும் அங்கே தான் வேலை செய்றாங்க. வினாயக் வந்தப்புறம் சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ்ல இருந்து ரிலீஸ் ஆன ப்ராடக்ட்ஸ் பெரிய அளவுல பேர் வாங்கலை. கம்பெனியோட ஸ்லீப்பிங் பார்ட்னரா இருந்தவர் வேற இறந்துட்டார். இப்போ எல்லாத்தையும் சந்திரமௌலி மட்டும் ஹான்டில் செய்றார் போலருக்கு. மூணு வருஷமா தொடர்ந்து லாஸ் ஃபைல் செய்திருக்காங்க. ஆனால இப்போ ரிசன்ட்டா பெரிய ப்ராஜக்ட் வந்திருக்குறதா என் ஃபிரென்ட் சொன்னா. அதனால இந்த வருஷம் லாபம் வரும்னு சொல்றாங்க!”
“நல்ல நெட்வொர்க் வச்சிருக்கீங்க. தேங்க்ஸ் ஃபார் தி டிடேயில்ஸ்! இப்போதைக்கு வேற கேள்வி எதுவும் இல்லை. நானும் சத்யாவும் உங்க வீட்டுக்கு வந்து எல்லோர் கிட்டேயும் பேசி பார்க்கிறோம். எப்போ போகலாம் சத்யா? நாளைக்குப் போகலாமா???”
“பொங்கல் வருது சக்தி. நீயும் இந்த ஊரு திருவிழா பார்த்தது இல்லையே. பயங்கரமா இருக்கும். அதை முடிச்சுட்டு பார்ப்போமே??” என்றாள் சத்யா.