“வினாயக் அப்படி கிடையாது. எனக்குத் தெரியும்!”
“நானும் அவர் கெட்டவர்ன்னு சொல்லலை. இருக்கலாம்னு சொல்றேன். அப்படி ஒருவேளை அவர் நடந்த சம்பவங்களோட சம்மந்தப் பட்டு இருந்தா நாம அதை அத்தாரிட்டீஸ் கிட்ட சொல்லி தான் ஆகனும்.”
ப்ரியம்வதா பாவமாக விழித்தாள். சத்யாவிற்கு அவள் மேலே பரிதாபம் ஏற்பட்டது.
“என்ன சக்தி நீ? பாவம் அவங்களே மனசு நொந்து நம்ம கிட்ட ஹெல்ப் கேட்டு வந்திருக்காங்க. இப்போ உட்கார்ந்து, கெட்டவன், மான்ஸ்டர் அது இதுன்னு சொல்லி பயமுறுத்துற!?” என்று தோழியிடம் சொன்ன சத்யா, ப்ரியம்வதாவிடம்,
“நீங்க கவலைப் படாதீங்க ப்ரியம்வதா. நாங்க என்ன நடக்குதுன்னு கண்டுப்பிடிக்குறோம். வினாயக் நல்லவரா தான் இருப்பார்ன்னு நம்புவோம்,” என்றாள்.
“தேங்க்ஸ் மேடம்!”
“எனக்கு இந்த மேடம் எல்லாம் சரியா வராது. சத்யான்னே கூப்பிடுங்க!”
ப்ரியம்வதா சரி என்று தலை ஆட்டினாள். சத்யாவின் பேச்சு அவளுக்கு தைரியம் கொடுத்திருக்க வேண்டும். அவளின் முகத்தில் இப்போது தெளிவு தெரிந்தது.
ஒரு பேப்பரில் தன மொபைல் நம்பரை எழுதி அவர்களிடம் கொடுத்தாள் ப்ரியம்வதா.
“இது என்னோட மொபைல் நம்பர். எப்போ எது வேணும்னாலும் கூப்பிடுங்க.”
சத்யா அதை வாங்கி வைத்துக் கொண்டாள்.
“இப்போ வேற ஏதாவது டீடெயில்ஸ் வேணுமா?”