மறந்து விட்டாளே!
"சாரி அம்மா! ரொம்ப பசிச்சிருச்சா??? இன்னைக்கு இதுக்கு காம்பன்ஸேட் செய்ய நானே தான் உங்களுக்கு ப்ரேக்ஃபாஸ்ட் செய்ய போறேன்,” என அர்ச்சனாவிடம் சொன்னவள், கனகாவிடம், “கனகா அக்கா, நீங்க ஏதாவது செஞ்சுட்டீங்களா என்ன?" என்று வினவினாள்.
அர்ச்சனாவை பார்த்து விட்டு,
"இல்லை இந்தும்மா, தோசை தான் ஊத்தனும்... நீங்க வந்த பிறகு செய்யலாம்னு இருந்தேன்," என்றாள் கனகா.
"ரொம்ப நல்லதா போச்சு நானே செய்றேன்," என்றாள் இந்து.
"இந்து, உனக்காக வெயிட் செய்ததுக்கு எங்களுக்கு கிடைச்ச தண்டனையா இது?" என்றாள் அர்ச்சனா புன்னகை மின்ன!
"அம்மா, என்னை உங்களை மாதிரி நினைக்காதீங்க! உங்களுக்கு தான் சமையல் சுத்தமா வராது. கனகா அக்கா மாதிரி யாராவது வேணும். எனக்கு எல்லாம் அப்படி இல்லை!"
"அதையும் தான் பார்ப்போமே!"
"பார்க்கலாமே," என்றபடி ரோஷத்துடன் சமையலறை பக்கம் சென்றாள் இந்து.
❀✿❀✿❀✿
நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சஞ்சீவ், எங்கேயோ கேட்ட சத்தத்தில் கண் விழித்தான். என்ன சத்தம் என்று கவனித்தவன், அவனின் அறையின் கதவு தட்டப்படுவதை உணர்ந்த
{/f90filter}
ு கோபப் பட்டான்!
அவனே தூக்கம் வராமல் புரண்டு புரண்டு இறுதியில் சில மணி நேரம் முன்பு தான் உறங்க தொடங்கி இருந்தான். சலிப்போடு சென்று கதவை திறந்தவன், கதவருகில் நின்ற