(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

அதைக்கேட்ட மற்றவர்கள் தங்களுக்குள்

   

”இந்த பொண்ணுகூட அழகா அடக்கமா இருக்கே அப்பா என்ன முடிவு செய்வாரு நான் கூட்டி வந்த பெண்ணை விட்டுட்டு இவளை தேர்ந்தெடுப்பாரோ” என நினைத்துக்கொண்டார் மோகனசுந்தரம்

   

சோனாவோ 

   

”ம் இவள் என்ன இப்படியிருக்கா இந்த வீட்டுக்கு மருமகளா வர்ற தகுதி கொஞ்சம் கூட இவளுக்கு இல்லை விட்ல இருக்கறவதான் பொண்ணுன்னா அப்ப வேலைக்கு போறவங்கள்லாம் என்னவாம். அதுசரி இவளுக்கு தேவைப்படலை அதனால வேலைக்கு  போகாம வீட்ல இருக்கா மத்தவங்க நிலைமை இவளுக்கு எங்க புரியப்போகுது இவளை விரட்டறது சுலபம்” என நினைத்து கேவலமாக சிரித்தாள் 

   

அவளின் சிரிப்பைப்பார்த்த சுசித்ரா தன் கணவரிடம்

   

”இங்க பாருங்க இந்த சோனா எப்படி சிரிக்கறாள்ன்னு வந்தனாவை விரட்டிடுவா போல இருக்கே” என சொல்ல அதற்கு அவரும்

   

”திமிரு பிடிச்சவளை விட இப்படி அமைதியா ஊமைக்கோட்டானா இருக்கற பொண்ணுங்கதான் ஆபத்து எதையுமே இப்பவே சொல்லிட முடியாது போகப் போக பாரு”

   

“இந்த பொண்ணு அடக்கமா இருக்கா சோனா வந்தனாவை விரட்டினாலும் நம்ம கருணாவுக்கு இவளை பேசிட்டா என்ன”

   

“ஒண்ணும் வேணாம் ஊரு உலகத்தில பொண்ணுங்களா இல்லை ரிஷிக்கு பார்த்த பொண்ணுங்களை எதுக்கு நம்ம பசங்களுக்கு பேசி முடிக்க பார்க்கற ஒண்ணும் வேணாம் அந்த பொண்ணுங்களும் ரிஷிக்காக வந்திருக்காங்க ரிஷி கிடைக்கலைன்னாலும் சரி நமக்கு வேணாம் நம்ம பசங்க லட்சணத்துக்கு ஏத்த பொண்ணா நாம தேடிக்கலாம்” என அவர் 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.