”அவ்ளோ பெருந்தன்மையானவனா நீ ஆனா, நான் உன் அளவுக்கு பெரிய மனசு படைச்சவள் இல்லை“
”நான் உன் வாழ்க்கையில நல்லது மட்டுமே நினைச்சி எல்லாத்தையும் செய்திருக்கேன், உனக்கு உதவியா இருந்திருக்கேன், உன்னை கெடுக்க வந்தவன்கிட்டயிருந்து உன்னை காப்பாத்தியிருக்கேன், அன்னிக்கு மட்டும் நான் இல்லைன்னா அன்னிக்கே நீ உன் மானத்தை இழந்திருப்ப”
”கரெக்ட்தான்”
”அப்புறம் என்ன உனக்குத் தேவை பாதுகாப்பு, அதுக்கு நான் இருக்கேன், குழந்தை வேணும்ங்கறியா வா ஆசிரமத்துல இருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம், நாம சந்தோஷமா இருக்கலாம் என்ன சொல்ற”
”இல்லை தருண் இது சரியா வராது இதுக்கு மேல உன்கூட வாழ என்னால முடியாது”
”நானே இவ்ளோ இறங்கி வந்து பேசறேன் ஆனா, நீ மனசு இரங்க மாட்டேங்கற, என்னை மன்னிக்க மாட்டியா”
”என்னதான் உன்னை மன்னிச்சி உன்கூட வாழ்ந்தாலும் ஏதாவது ஒரு சமயத்தில உன் குறைதான் எனக்கு பெரிசா தெரியும் அதனால நமக்குள்ள சண்டை சச்சரவு வரும் அது தேவையா சொல்லு“
”அப்படி ஏதும் வராது நமக்கு, கல்யாணம் ஆகி 5 மாசம் கூட ஆகலை அதுக்குள்ள என்ன டைவர்ஸ்லாம் அப்படியே நாம கோர்ட்டுக்கு போனாலும் ஒரு வருஷம் ஆனாதான் டைவர்ஸ் தருவாங்க“
”அதெல்லாம் மத்தவங்களுக்கு, உனக்கிருக்கற குறையை எடுத்துச் சொன்னாலே போதும் ஜட்ஜ் நமக்கு டைவர்ஸ் தந்துவாரு”