வரலாம்," என்றாள் ஜான்வி.
"ரிலாக்ஸ் ஜானு! உங்க இரண்டு பேரையும் இன்வைட் செய்ய வந்தேன்," என்றான் சரவணன்.
"இப்போ தானேடா கல்யாணம் முடிஞ்சுது, அதுக்குள்ள நெக்ஸ்டடா?" என்றான் விக்கிராந்த் கிண்டலாக!
"டேய் விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதே, என் ரூபி தவிர வேற ஒருத்தியை நான் நினைச்சு கூட பார்க்க மாட்டேன்!"
"சூப்பர்டா! நான் தான் அடுத்த இன்வைட் தர போறேன்னு நினைச்சேன், நீ என்ன புதுசா கதை சொல்ற?"
ஜான்வி மகிழ்ச்சியும் ஆச்சர்யமுமாக விக்கிராந்தைப் பார்த்தாள்!
"ஹேய் விக்கி, என்னடா சொல்ற? ஆர்த்தி உன்னை சமாதானப் படுத்திட்டாளா? சொல்லவே இல்லை? அது தானா கணேஷை சீனியர் ப்ராஜக்ட் மேனேஜர் ரோலுக்கு ரெகமென்ட் செய்திருக்கிறது கூட உன்னை அசைக்கவே இல்லை?"
"என்ன சொல்ற ஜான்வி நம்ம விக்கியை ரெகமென்ட் செய்யாமல் அந்த காக்கா கணேஷுக்கு ப்ரமொஷனா? என்ன கொடுமை இதெல்லாம்," என்றான் சரவணன் எரிச்சலுடன்.
"இரு சரோ! விக்கி, நீ சொல்லு, எப்போ கல்யாணம்? எப்படி நடந்துச்சு இதெல்லாம்?" என மீண்டும் விக்கிராந்தித்ம கேட்டாள் ஜான்வி.
"ஜானு, பொறுமையா கேளு சொல்றேன்! முதல்ல இதை தெரிஞ்சுக்கோ! பொண்ணு ஆர்த்தி இல்லை," என்றான் விக்கிராந்த்.
"வாட்?"
"என்னது"