உள்ளே சென்றாள் துளசி.
நந்திதாவின் எதிரே சென்று நின்று முறைத்தவள்,
“நீ என்ன லூசாடி? மேல ஒரு ஷால் ஏதாவது போட்டுட்டு போய் கதவை திறக்க மாட்டீயா?” என்றாள்.
“நீன்னு நினைச்சேன் துளசி... உதய் இங்கே வருவார்ன்னு எனக்கு எப்படி தெரியும்... அப்புறம் எப்படி முகத்துல அடிச்ச மாதிரி கதவை மூடுறதுன்னு...”
“தேவை இல்லாத விஷயத்துக்கு எல்லாம் லண்டன்ல இருந்து அண்டார்டிகா ரேஞ்சுக்கு வாய் கிழிய பேசு... தேவைப் படும் போது இப்படி பேன்னு முழி...”
“....”
“சரி சரி மூஞ்சியை தூக்கி வச்சுக்காதே...”
“அதெல்லாம் இல்லை ஒசிமம்... நீ எனக்காக தான் சொல்றேன்னு எனக்கு தெரியும்...”
“குட்! தலையை துவட்டினீயா? அப்புறம் சளி பிடிக்க போகுது...”
“ம்ம்ம்ம்....”
நந்து கட்டிலில் அமர, துளசியும் அவளின் அருகே அமர்ந்தாள்.
உதயின் பார்வை நினைவில் வர... நந்திதாவின் முகம் அவளையும் அறியாமல், என்ன ஏது என்று புரியாமலே சிவந்தது...
“துளசி...”
‘ம்ம்ம்...”