அப்படி என்ன செய்திருக்கான்?”
“ஒரு கம்பெனியை ஆரம்பிச்சு இவ்வளவு திறமையா நிர்வகிக்குறது ஈசி இல்லையே துளசி... ஆஃபீஸ்ல அவர் எப்படி இருக்காருன்னு நான் எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன்... இன்னைக்கு எக்சிபிஷன்ல வந்தவங்க அவ்வளவு பெரிய டெலிகேட்ஸ்... ஆனாலும் பிரச்சனைன்னு வந்தா எவ்வளவு கூலா ஹாண்டில் செய்தார் தெரியுமா?”
“ஹ்ம்ம்... ஓகே... இன்னைக்கு என்னவோ பெருசா நடந்திருக்குன்னு சொல்லு...”
“யெஸ் ஒசிமம்...” என்ற நந்து, காலையில் பிரிந்துக் கிடந்த சர்க்யூட் துவங்கி, உதயின் கையை சட்டென விலக்கியதையும் சேர்த்து, இரவு டின்னர் வரை எல்லாவற்றையும் தோழியிடம் ஒப்பித்தாள்.
அவள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி வியந்தபடி,
“பெரிய சூப்பர் ஸ்டார் ஆகிட்டேன்னு சொல்லு...” என்றாள் துளசி புன்னகையுடன்.
“இது வெறும் சின்ன ஸ்டெப் தான் துளசி... இன்னும் ப்ரொடக்ஷன் ஆரம்பிக்கனும்... அவங்க ஃபேக்டரில அப்க்ரேட் செய்யும் போது பிரச்சனை இல்லாமல் இருக்கனும்... அப்புறமும் எல்லாம் எக்ஸ்பெக்ட் செய்ற மாதிரி இருக்கனும்...”
“அதெல்லாம் சரியா தான் இருக்கும்...”
“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு... இந்த வேலையை அக்சப்ட் செய்துக்கிட்டதுக்கு ரொம்ப சந்தோஷப்படுறேன்...”
“குட்... சரி நந்து, நான் கிளம்புறேன்... இன்னைக்கு வெள்ளிக் கிழமை, கூடவே உதய் வேற வந்திருக்கான், ஸோ பேசிட்டு தூங்க லேட்டாகும்... நீ அங்கே வரலையா?”
“இல்லைப்பா... நீ போ... நான் இன்னைக்கு சீக்கிரம் தூங்க போறேன்... ரொம்ப டையர்டா இருக்கு... ஸோ மச் எக்சைட்மென்ட் ஒரே நாள்ல வந்தால் எப்படி?”