“அப்போ, நீ சும்மா சொன்ன???”
“ஹ்ம்ம்... ஆமாம்...”
“என்னை நம்ப வை....”
“எப்படி நம்ப வைக்குறது???”
தன் வலது கன்னத்தில் வலது ஆட் காட்டி விரலை வைத்து, “இங்கே ஒரு இச் கொடு... நம்புறேன்,” என்றாள் ரேஷ்மி.
ஷ்யாம் திகைத்துப் போய் நின்றான்...
“என்னடா இப்படி முழிக்குற நீ???”
“என்ன நீ என்ன எல்லாமோ கேக்குற???”
“ஷ்யாம்... நீயும் ஒரு டாக்டர், நானும் ஒரு டாக்டர்.. இரண்டு பேரும் லவ் செய்றோம்.. ஒரு முத்தம் கேட்டா தப்பா???”
“நல்ல கேள்வி!!!! நியாயப் படி நான் இதை கேட்கனும், நீ வெட்கப் படனும்...”
“ஹாங்... அப்படி எல்லாம் நடக்கும்ன்னு நானும் நாலு வருஷமா வெயிட் செய்தேன்... ஒன்னும் நடக்க காணோம்... அதான் நானே ஆக்ஷன்ல இறங்கிட்டேன்... சரி, என்ன சொல்ற??? தர போறீயா? இல்லியா???”
“ஹ்ம்ம்.... உனக்கு தான் என்னை பத்தி நல்லா தெரியுமே... நான் அம்மாவை கேட்காம எதையாவது செஞ்சிருக்கேனா??? இதையும் அம்மா கிட்ட கேட்கிறேன்... அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...” என்றபடி தன் செல்ஃபோனை கையில் எடுத்தான் ஷ்யாம்...