கொண்டிருந்தாள்.
மைத்ரேயி வாய் திறந்து எதுவும் சொல்லாமலேயே அவளின் மனதில் ஓடும் எண்ணம் மித்ரனுக்கு புரிந்தது... ஆனாலும்,
“என்னை ஏன் மைத்தி பார்க்கிற?” என்று அவளின் பார்வைக்கான காரணம் புரியாதவனைப் போலக் கேட்டான்...
“அம்மா சொன்னது உன் காதுல விழுந்துச்சா???”
“ம்ம்ம்ம்... விழுந்துதே... விழாம என்ன? ரெண்டு பேரும் பெரிய சமுக சேவகிகளா மாறிட்டீங்கன்னு புரியுது. ஆனால், அதுக்கு எதுக்கு என்னை பார்த்து முறைக்குற? நான் ஒன்னும் சொல்லவும் இல்லை, செய்யவும் இல்லையே...”
“நாங்க பேசிட்டு இருக்குறது சரண்யா பத்தி... கோபியோட வைஃப் சரண்யா பத்தி...”
“சரி... அதுக்கு?”
“இங்கே பாருண்ணா, சரண்யா நல்ல பொண்ணு, ரொம்ப சாஃப்ட் டைப்பும் கூட... அவளும் அவ பொண்ணும் இங்கே நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கினா அவங்களுக்கு ஈசியா இருக்கும்... கூடவே இரண்டு பேருக்கும் ஒரு மாறுதலாவும் இருக்கும்... ஆனால் அவ இங்கே வந்தா அவளை நீ முன்னாடி செய்த மாதிரி மிரட்டக் கூடாது, தேவை இல்லாம பேசக் கூடாது... அப்புறம்...”
மைத்ரேயி பேசி முடிக்கும் முன் குறுக்கிட்டு பேசிய மித்ரன்,
“நிறுத்து, நிறுத்து! எனக்கு என்ன வேற வேலையே இல்லையா மைத்தி?? முன்னாடி அவ அங்கே கம்பெனில இருந்தா... அதுல ஒரு வேல்யூவும் எனக்கு தெரியலை. அதை நேராவே சொன்னேன்... இப்போ எனக்கு என்ன பிரச்சனை? நீ ஆச்சு, அம்மா ஆச்சு இரண்டு பேரும் என்ன வேணா செய்ங்க... நான் அந்த பக்கமே வர மாட்டேன்,” என்றான்.