தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 44 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தோட்டத்தில் இருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த ரேவதி, நந்திதாவை பார்த்து விட்டு,
“உட்கார்,” என்றாள்.
தயக்கத்துடன் சின்ன இடைவெளி விட்டு அதே பெஞ்சில் அமர்ந்தாள் நந்திதா...
“சீக்கிரமே நீயும் எங்க குடும்பத்துல ஒருத்தியாக போற... அதனால தான் உன் கிட்ட பேசனும்னு நினைச்சேன்...”
“சொல்லுங்க...”
“வயசு வித்தியாசம்... அந்தஸ்த்து வித்தியாசம் எதையும் பார்க்காம ஏன் நானே இறங்கி வந்து இந்த கல்யாணத்தை பத்தி பேசுறேன்னு உனக்கு தெரியுமா?”
நந்திதா இல்லை என தலை அசைத்தாள்.
“உதய்க்காக... உதய்க்காக மட்டும் தான்... அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கு!”
நந்திதா ரேவதியையே பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்!
“காமாட்சி அக்காவும் கூட உன்னை பத்தி நல்ல விதமா சொன்னாங்க... ஆனால் உதய்க்கு பிடிச்சிருக்க ஒரே காரணத்துக்காக தான் இந்த கல்யாணம் நடக்க போகுது...”
அதை சொல்லி விட்டு ரேவதி நந்திதாவின் பக்கம் பார்க்கவும், அமைதியாக இருப்பது சரியில்லையோ என்ற கேள்வி நந்திதாவினுள் தோன்றியது! என்ன பேசுவது என்று தெரியாவிட்டாலும், “தேங்க்ஸ்... நான்,” என அவள் திக்கி திணறி பேசும் போதே ரேவதி குறுக்கிட்டாள்!
“இரு, நான் சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடிச்சிடுறேன்...”