மீதியிருந்தவர்களோ ரவியின் நிலைமையைக் கண்டு
”அண்ணா இவனை என்ன செய்றது“
“பிழைப்பானா மாட்டானா”
”பிழைக்க வாய்ப்பு இருக்குன்னுதான் நினைக்கிறேன்”
”நினைக்காத, அவனை உயிரோடவே இந்த இடத்தில புதைச்சிடு, வெளி உலகத்துக்கு ரவி தலைமறைவாயிட்டான்னு சொல்லிடு”
”சரிண்ணா”
”சிவாகிட்ட இந்த தகவலை சொல்லிடுங்க”
”சரிண்ணா”
”நான் கிளம்பறேன்”
”நீ கிளம்புண்ணா நாங்க பார்த்துக்கறோம்”
”அப்புறம் சேகரை காட்ட வந்தானே அந்தாளை மறுபடியும் நிகழ்ச்சி நடத்தற இடத்தில விட்டுடுங்க, அவனை மிரட்டி வைங்க அப்பதான் நம்மளை பத்தி வெளிய சொல்லமாட்டான்”
”சரிண்ணா அப்படியே செய்றோம்” என சொல்லவும் தில்லையும் கோபமாக சம்யுக்தாவை அங்கிருந்து அழைத்துச் சென்று வண்டியில் ஏறினான்.
அவனின் கோபத்தைக் கண்டு சம்யுக்தாவோ பயந்தாள். அவனோ வண்டியை கிளப்பாமல் அமைதியாக இருந்தான், அவனின் அமைதியைக் கண்ட சம்யுக்தாவோ