(Reading time: 38 - 76 minutes)

 

ம்ம மனசுக்குன்னு ஒரு ஷக்தி இருக்கு ... இந்த பூமி போர்களமா இருந்து மனுஷன் அதில் வீரானாக கருதப்பட்டால், அவன் மனம்தான் ஆயுதம்.... நம்ம 'என் இனியவளே ' ல இளா, இனியாவின் வசனம் மூலகமாக பாலா கூட சொல்லிருப்பாங்க ' நம்ம எண்ணத்துக்குனு ஒரு ஷக்தி இருக்குனு..... '

நாம எதை நினைகிறோமோ அது கண்டிப்பா நடக்கும் .. நடந்தே தீரும் .. அது நியதி ..... ஆஸ்திகனாக இருந்தாலும் சரி நாத்திகனாக இருந்தாலும் சரி, நமக்கும் மேல ஒரு ஷக்தி இருக்கு என்பதை நம்பித்தான் ஆகணும். அடுத்து வர்ற சீன் , கற்பனை , கடவுளின் அருள் அல்லது அறிவியல்படி பார்த்தா ஆழ்மனதின் வெளிபாடு என்று அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றவாறு  எடுத்து கொள்ளுங்கள்... !! ( இவ்வளவு சீரியஸ் நோட்டு இப்போ அவசியமா பூவி? எல்லாரு கண்ணையும் பாரு 2 இன்ச் அகலமா திறந்திருக்கு .. ஹீ ஹீ)

ஜானகி கண்ணீர் விட்டு மன்றாடி சோர்ந்து உறங்கி போனாள்... பதில் கேட்டு அழுதவளுக்கு பதில் சொல்ல வந்தான் அவளின் ஸ்ரீராம் ...... கனவில் !!!!!!!!!!!

அருகில் ஒரு மரக்கிளையில் குயிலொன்று "கூ  கூ " என்று கூவும் சத்தம் கேட்க, பூக்களின் வாசம் திசைகளின்றி  எல்லா இடத்திலும் வியாபிக்க, அங்கு தனியாய் நின்றிருந்தாள் ஜானகி கண்ணீருடன். முகத்தை மூடி அழுது கொண்டிருந்தவளுக்கு அங்கு இசைத்த குயிலோ, பொய்கையில் மிதந்த அன்னப்பறவையோ, வாசம் வீசும் வண்ண மலர்களோ  எதுவுமே கருத்தில் பதியாதிருந்தது... அவளது நீண்ட கூந்தலில் ஒற்றை ரோஜா ஒன்றை சூட்டி அவளை பின்னாலிருந்து அணைத்தான்  அவளின் ஸ்ரீராம் ..

" கண்ணம்மா "

" ராம்.............. "

" ஏண்டா அழறே ? "

" ராம் ..... ராம்.....நீங்க என் கிட்ட வந்துட்டிங்களா?

" மக்கு ... நான் எப்போடி உன்னை விட்டுட்டு போனேன் ? " என்றவாறு எப்போதும்போல அவளின் தலையில் செல்லமாய் தட்டினான் ஸ்ரீராம்.

" .... "

" சரி இந்த இடத்துல என்ன இருக்கு சொல்லு "

" நீங்களும் நானும் "

" இருந்தாலும் என் கண்ணம்மா இவ்வளோ மக்கா ஆகுவான்னு நான் நெனச்சே பார்கலயேடி "

" ஏனாம் ? "

" அங்கே பாரேன் " என்றவன் குயில், அன்னபரவைகள், பூக்கள் என்று அந்த நந்தவனத்தில் கொட்டிக்கிடந்த அத்தனை இயற்கை அழகையும் அவளுக்கு காட்டி அவளையும் ரசிக்க வைத்தான். சிறுமியை போல் ஆர்பரித்தவள், நிம்மதியுடன் அவன் தோளில் சாய்ந்து கண் மூடினாள்.

" கண்ணம்மா "

" ம்ம்ம்ம்ம் ? "

" இப்போ சொல்லு இந்த இடம் எப்படி இருக்கு ? "

" சுவர்க்கம் மாதிரி இருக்கு ..."

" ஆனா நான் வர்றதுக்கு முன்னாடி இந்த இடம் உன் கண்ணுக்கு சுவர்க்கமா தெரியலைதானே ? "

" ம்ம்ம்ம்ம் ஆமா ராம் "

" கண்ணம்மா ... எனக்கு எப்பவும் உன்மேல உரிமை இருக்கு .. நான் எப்பவும் உன்னோடுதான் இருக்கேன். நீ சரியான விஷயம் பண்ணும்போது நான் சந்தோஷப்படுறேன் ... அதே மாதிரி தப்பு பண்ணும்போது எனக்கு கோபம் வர்றதும் நான் வருத்தப்படுறதும் தப்பில்லை தானே ? " சின்ன பிள்ளைக்கு விளக்குவது போல் அவன் கேள்வி கேட்டான்.

" அப்போ நான் தப்பு பண்ணி உங்களை கஷ்டபடுத்துறேனா ராம் ? " என்று பாவமாய் கேட்டாள் ஜானகி.

அவள் தலையில் ஆதரவாக வருடியவன் " பேசியே மயக்கிடு டீ ... " என்று அவளை முத்தமிட்டான்.

" சொல்லுங்க ராம் "

" ம்ம்ம் ஆமா டீ "

" அப்படி என்ன நான் பண்ணேன் ? "

" இதோ இப்போ நீ பண்ண அதே தப்புதான்  "

" புரியலையே ராம் "

" நான் வர்றதுக்கு முன்னாடி இந்த இடமும் அதன் அழகும் உன் கருத்தில் படல தானே? சுவர்க்கம் மாதிரி இருக்குன்னு சொன்னியே , இந்த சுவர்க்கம் ஏன் உன் கண்ணுக்கு தெரியல ? "

" இதில் என்ன தப்பு ராம் ? "

" தப்புதான் ஜானு .. நீ இதையேதான் எப்பவும் செய்யறே டீ .. நான் உன்கூடவே தானே இருக்குறேன் . அதை உணராமல் உன்னை சுத்தி உள்ள சந்தோஷத்தை உணராமல் ஏன் ஒதுக்கி வைக்கிற ? ஏன் இப்படி இருக்கே ஜானு ? " ( நம்ம ரகுராம் கேட்ட அதே கேள்வி " ஏன் இப்படி இருக்கே ஜானு ? " )

" அது .... அது .. நான் நல்லாதானே இருக்கேன் ராம் .. சந்தோஷமா இருக்கேனே ? "

" என் முகத்தை பார்த்து சொல்லு டீ  "

"...."

" ஜானு இன்னைக்கு இங்கு நடந்ததை தான் நீ தினமும் உன் லைப் ல பண்ணுறன்னு சொன்னா உன்னாலே மறுக்க முடியாது ... உன்னை சுத்தி நிறைய சந்தோசம் இருக்கு ... உன் மேல பாசம் காட்டவும் உன் பாசத்துக்காக ஏங்கியும் நிறைய பேரு இருக்காங்க.. அர்ஜுன், பானு அம்மா, சுபத்ரா, கிருஷ்ணா, மீரா , சுபத்ராவின் அம்மா அப்பா "

" ...."

" ரகு ...ரகுவின் அம்மா அப்பாவும் கூட "

" ராம் ....... "

"  நான் உன் கிட்டே ஏற்கனவே சொன்னதுதாண்டி ... உன்னை விட்டு போனது என் உடல் தான் உயிர் கிடையாது கண்ணம்மா ... ஏதாச்சும் ஒரு உயிர் மூலமா நான் உன்னை வந்து சேருவேன்னு சொன்னேன் தானே "

" ம்ம்ம்ம்ம் "

" அப்போ ஏன் என் அன்பை ஒதுக்கி வைக்கிற ? "

" உங்க அன்பை என்னாலே எப்படி ஒதுக்கி வைக்க முடியும் ராம் ? ஆனா அதே நேரம் இன்னொருத்தரை என்னால எப்படி உங்க இடத்துல வெச்சு பார்க்க முடியும் ? "

" நீயேன் டீ இன்னொருதரா பார்க்குறே ? அன்புக்கு உருவம் இருக்கா கண்ணம்மா ? நான் என்னுடைய அன்பை எல்லாம் ஒவ்வொருத்தர் மூலமாக அனுப்பிட்டு தான் இருக்கேன் ... நான் உன் பக்கத்துல இருந்து என்ன செய்யணுமோ அதைதான் மத்தவங்க செய்றாங்க . நான் நிழலா உன்னை தொடர்ந்து கிட்டுதான் இருக்கேன்.. "

" ..."

" ரகுராம் ரொம்ப நல்லவர் ...உன்மேல உயிரையே வெச்சிருகாரு ...நான் உன்மேல காட்டுற அன்பை விட ரகு உன்மேல வெச்சிருக்குற நேசம் பெருசு ... "

" ராம் ??? "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.