" நண்பா ..என்னை நம்பு "
" அப்போ ஒழுங்கா நாளைக்கு நம்ம வீடுக்கு லஞ்ச் சாப்பிட வா "
" நாளைக்கா ? "
" என்ன நாளைக்கா ? நான் வர முடியுமான்னு கேக்கல ! வான்னு சொல்லுறேன்,.. அபப்டியே என் சிஸ்டர் ஐயும் கூட்டிட்டு வா "
" சிஸ்டர் ஆ ? "
" ஜானகி ... சுஜாதா என்கிட்ட கதை கதையா சொன்னா.. நான் கண்டிப்பா என் பாசமலரை நாளைக்கு பார்க்கணும் "
" ஹா ஹா நீயே அவகிட்டே " என்றவன் போனை கொடுக்க , ஜானு திருதிருவென முழித்தாள்.... சுஜாவின் கணவர்தான் பேசும்மா எனவும் போனை எடுத்தவள்,
" ஹெலோ ஜானகி "
" அண்ணா ? "
" நாளைக்கு பிஸி யா மா ? "
" இல்லை ஏன் அண்ணா? "
" நாளைக்கு அண்ணனை பார்க்க வீட்டுக்கு வாயேன் " எனவும் அவளுக்கு அதை மறுக்கவே தோணவில்லை ...
" சரிண்ணா "
" சரி ஓகே டா ..பை " என்றவன் ஜானகியை பார்த்தான் ..
" உனக்கு ஓகே தானே ஜானகி ? ..நாளைக்கு போலாமா ? "
" ம்ம் போலாம் ரகு .. எனக்கும் அண்ணாவை பார்க்கனும்னு ஆசையா இருக்கு "
" இதென்ன புது பாசம் ? "
" தெரில எனக்கே "
மறுநாள் ஜானகியை அழைத்து கொண்டு சுஜாதாவின் வீட்டிற்கு சென்றான் ரகுராம்.
" ஹாய் சுஜா"
" வாங்க பாஸ் .. வா ஜானு ... "
" பேபி உங்க பாசமலர் வந்தாச்சு "
" இதோ வரேன் சுஜி " என்று கிச்சனில் இருந்து வந்தான் நம்ம சுஜாதாவின் இன்னொரு பாதி ... ரவிராஜ் .. இதுவரை கேள்வி பட்டத்திற்கும் அவனின் தோற்றதிற்கும் சம்பந்தமே இல்லை எனலாம் .. சிநேகாமான புன்னகை , பார்த்ததுமே கவர்ந்துவிடும் சாந்தமான முகம்..
அவர்களுடன் அமர்ந்திருந்த சுஜாதாவின் தோள் மீது கைபோட்டு அமர்ந்தவன்
" என்ன... எல்லாத்தையும் நீதான் சமைச்சதா அள்ளி விட்டுடியா ? " என்று சுஜாதாவை வாரினான் ..
" ஹாய் டா... ஹாய் தங்கச்சி " என்றவனின் குரலில் அன்பினை உணர்ந்தாள் ஜானகி ...
அதை கவனித்த சுஜாதா " போதும் போதும் நீங்க பாட்டுக்கு உங்க சீரியலை ஸ்டார்ட் பண்ணாதிங்க ... ஆமா அப்படியே நான்தான் சமைச்சதா சொன்னாலும் இவங்க நம்பிடுவாங்க பாருங்க " என்றாள்...
" அவங்க நம்புலன்னா என்ன பேபி, அதான் நான் இருக்கேனே,.. என் ப்ராந்தி வானத்துல வெள்ளை காக்கா பறக்குது சொன்னாலும் நான் நம்புவேனே " என்று சொல்லி புன்னகைத்தான். இப்படியே இருவரும் ஒரு நிமிடம் கொஞ்சல் ஒரு நிமிடம் மிஞ்சல் என்று பேசிக்கொண்டு அவ்வப்போது நம்ம ரகு- ஜானுவிற்கும் பேசும் வாய்ப்பை தந்தனர் ..
அனைவரும் உணவு உண்ணலாம் என்று முடிவெடுக்க, அவர்களிடம் பேச்சு கொடுத்தபடியே சமைத்த உணவுகளை கொண்டுவந்தான் ரவிராஜ்.
" உங்க ரெண்டு பேரையும் பார்த்த அரேஞ் மேரேஜ் மாதிரியே இல்ல அண்ணா "
" அரேஞ் மேரேஜ் கும் லவ் மேரேஜ் கும் பெருசா வித்தியாசம் இல்லடா.. அரேஞ் மேரேஜ் ல குடும்பமாக சேர்ந்து கிணத்துல தள்ளி விடுவாங்க ... லவ் மேரேஜ் ல நாமலே விழுவோம் "
" ஓஹோ அப்போ என்னை கட்டிகிட்டது உங்களுக்கு கிணத்துல விழுந்த மாதிரியா ? "
" அதை நான் என் வாயல சொல்லனுமா பேபி ?"
" விடுங்க சுஜா இன்னைகாச்சும் என் நண்பன் மனசுல தோணுறதை சொல்லட்டுமே "
" பாஸ் யு டூ ? "
" அந்த கிணத்துல குதிக்காம நீங்க ஓடிருக்கலாம்ல அண்ணா ? "
" யாருடா என்னை தப்பிக்க விட்டா ? அதுவும் நமக்கு ஓட்டபந்தயம் லம் வராது.. சுஜா தான் அதுல கில்லாடி .. அதுவும் என்னை விட வேகமா ஓடுறதுனா அவளுக்கு அவ்வளோ இஸ்டம்... பி டி உஷாவின் ரெகார்ட் கூட பிரேக் பண்ணிருப்பா தெரியுமா ? "
" நிஜமாவா ? " என்று இருவரும் கேட்க, கணவன் சொல்ல போவதை யூகித்த சுஜா
" பேபி...நோ... சும்மா இருங்க " என்றாள்..
" நீங்க சும்மா இருங்க சுஜா .. அண்ணா நீங்க சொல்லுங்க "
" என்னுடைய உறவுக்கார பொண்ணு அப்போ ஹாஸ்பிடல்ல இருந்தா .. அவளை பார்த்துட்டு நானும் சுஜாவும் வீட்டுக்கு கிளம்பினோம். அப்போ அங்கே ஸ்லோப் மாதிரி படிகட்டு இருந்துச்சு "
" ம்ம்ம்ம் அப்பறம்? "
" உன் மக்கு அண்ணிக்கு என்னை விட வேகமா படி இறங்கி, அவங்கதான் பாஸ்ட் , நம்பர் 1 நு காட்டிக்க ஆசை "
" அய்யே இப்படிலாம் கூடவா ஆசை இருக்கும் ? "
" என் பேபிக்கு இருந்ததே "
" சரி அப்பறம்"
" நான் எப்பவுமே அவளுக்கு விட்டு கொடுக்குற ஆளுதான் " ( நீங்க ரொம்ப நல்லவரு அண்ணா "
" ம்ம்ம்ம்"
" ஆனா நம்ம ஜான்சி ராணி என்னை விட வேகமாய் போவேன்னு சொல்லி இறங்கி போனாங்க "
" ஓஹோ அப்போ யாருதான் வின் பண்ணா ? "
" சுஜா தான் "
" வாவ் சூப்பர் சுஜா நீங்க "
" வைட் வைட் ஆனா நான் கீழே இறங்கி வந்து பார்க்கும்போது அவ அங்க இல்ல "
" ஏன் "
" கொஞ்சம் குனிஞ்சு பார்த்தா ? "
" பார்த்தா ? "
" என் பேபி என்னை ஜெயிக்கணும்னு படியில உருண்டு வந்துருக்கு .. அதாவது கால் தடுக்கி விழுந்து உருண்டு வந்துருச்சு .... ஹா ஹா ஹா ( நம்ம பிரண்ட்ஸ் படத்துல விஜய் சிரிச்ச மாதிரி சிரிச்சார் நம்ம ரவிராஜ் )
" அப்பறம் என்னாச்சு "
" ஹா ஹா "
" அண்ணா ப்ளீஸ் சொல்லுங்க என்னாச்சு ? "
" ஹீ ஹீ "
" சுஜா நீங்களே சொல்லுங்க ப்ளீஸ் "
" அப்பறம் என்னச்சா? "
" ம்ம் சொல்லுங்க "
" நான் இறங்கி வரும்போது கையில இளநீர் வெச்சிருந்தேன் ..."
" சரீ...."
" நான் விழுந்த வேகத்துல அதுவும் உருண்டு ஓடிருச்சு ..பாஸ் நீங்க அங்க இருந்தா என்ன பண்ணுவிங்க ? "
" சிரிச்சுருப்பேன் ...... "
" அதைதான் இவரு சூப்பர் ஆ பண்ணாரே.... அதுக்கப்பறம் என்ன பண்ணுவிங்க ? "
" என்ன பண்றது ..கை கொடுத்து தூக்கி இருப்பேன் "
" ம்ம்ம் ஆனா என் கணவர் என்ன பண்ணார் தெரியுமா ? "
" என்ன? " என்று இருவரும் கேட்க
( அதை இப்போ சொல்ல மாட்டேனே ? வேணும்னா அவங்க கிட்டே கேட்டுகோங்க ... ஹீ ஹீ ... இந்த தடவையாவது உங்களுக்கு டென்ஷன் கொடுக்காமல் வெறும் காமெடி ட்விஸ்ட் வெச்சிட்டு போறேன் ... அடுத்து என்ன எல்லாம் நம்ம கண்ணாமூச்சி நாடகங்களை பார்க்க போறோம்னு பொறுத்திருந்து பார்ப்போம் ..சுஜாதா- ரவிராஜின் காதல் காவியத்தை அடுத்த எபிசொட் ல சொல்றேன்... பை பை )
தொடரும்
{kunena_discuss:734}