“நிஜமாவா?...”
“ஹ்ம்ம்… ஆமாம் அம்மா…” என்று சொல்லி சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டான்… கோதைக்கும் புரிந்து விட்டது… அவரும் சிரித்துக்கொண்டே மருமகளைப் பற்றி கனவு காண துவங்கிவிட்டார்…
பின், தாமதமாக வந்ததற்கு முகிலனிடம் ஆதியும், அங்கே மயூரியிடம் சாகரியும் ஒரு காதில் திட்டு வாங்கிக்கொண்டே இன்னொரு காதில் விட்டுவிட்டனர்.. அவரவர் வேலையை அவரவர் செய்த போதிலும் இருவரின் மனமும் ஒருவரை ஒருவர் சந்தித்த நிகழ்வையே எண்ணிக்கொண்டிருந்தது மிக மிக… இரவும் வந்தது… அவளும் அவனும் அன்றைய நாளின் நிகழ்வை டைரியில் பதிவு செய்தனர்..
அவனின் டைரியில்…
“உலகத்திலுள்ள அனைத்தையும்
ரசித்து மகிழ்வதற்கு தான்
இறைவன் கண்களைக் கொடுத்திருக்கின்றான்
என்று நினைத்திருந்தேன்…
நேற்று வரை… ---- ஆனால்…
இன்று தான் அறிந்து கொண்டேன்…
அது உலகை ரசிப்பதற்கல்ல…
என் உலகமாகிய உன்னை ரசிப்பதற்கென்று…”
அவளின் டைரியில்…
“கண்களும் பேசும் என்ற
உண்மை அறிந்தேன் நானும்…
நீ என்னைப் பார்க்க துடித்த போது…
கடவுளிடம் வரம் ஒன்று
கேட்க நேர்ந்தால்..
இமைகள் இல்லாத விழிகளை
கேட்பேன் நான்…
சிறு கணப் பொழுதாயினும்
உன்னை நான் பார்க்க முடியாதோ என்று…”
என்று இருவரும் மாற்றி மாற்றி கவிதை எழுதி விட்டு, அந்த இரவை உறங்காமல் கழித்தனர் மீண்டும் எப்போது பார்ப்போம் என்ற ஆவலுடன்…
நாமும் காத்திருப்போம்… அவர்களின் அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி… ஆவலுடன்…
இந்த வார கதை உங்களுக்குப் பிடித்திருந்ததா?... ஒரு நாளின் நிகழ்வை மட்டும் இங்கு சொல்லியிருக்கின்றேன்… அதனால் எதும் கோபம் உள்ளதா உங்களுக்கு?... பார்த்ததும் காதல்… ஹ்ம்ம்… படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள் அது எதுவாக இருப்பினும்… மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதையும் குறிப்பிடுங்கள்… விழியில் விழுந்து இதயம் நுழைந்து பாடல் வரிகளை இந்த வாரமும் பயன்படுத்திவிட்டேன்… முன்னமே நமது கதையில் பயன்படுத்தி இருந்தேன்… இருந்தாலும் எனக்கு அந்த இடத்தில் அந்த பாடல் வைக்கவே மனம் உறைத்தது… மன்னித்துவிடுங்கள் அதற்காக… ஹ்ம்ம்.. எப்படி இருக்கிறது ராம்-சீதா வின் முதல் வார காதல் நதியின் பயணம்?... ஹ்ம்ம்… அடுத்த வாரம் மீண்டும் காதல் நதியில் சந்திக்கலாம்…
தொடரும்
{kunena_discuss:739}