" ஐயோ இருங்க மேடம்.. என்னதான் இருந்தாலும் நீங்க எங்க பாஸ் கு பி ஏ... ரெண்டு மூணு மாசமா நீங்க வந்து பிடிக்காத பதவி அந்த மதுவுக்கு கிடைச்சிருச்சு ...."
" வாட் ?"
" நம்ம ஆபீஸ் கு வர்ற போற முக்கியமான ப்ராஜெக்ட் நம்ம மது கைக்கு போக போகுதாம் .. அதுவும் நீங்க ரிசைன் பண்ண போறீங்க... மெய் பீ இனி மது தான் பி ஏ வாம் "
" ஒ....... இதுல பரிதாபம் எங்க வந்துச்சு ? "
ஜானகி இயல்பாய் கேட்ட விதத்தில் மூக்கருபட்டதுபோல உணர்ந்தாள் வாணி ...
" இது பாருங்க வாணி ..... இது ஆபீஸ் ... இங்க யாருக்கும் நிரந்தர இடம் இல்ல... ஒருத்தரை விட ஒருத்தர் முன்னேறிகிட்டு போவாங்க .. முன்னேற்றம்தான் நம்ம கம்பனி வளர்வதை சுட்டி காட்டும் ..இதுல யாரு பெருசுன்னு எனக்கு எதுவும் இல்ல.. நான் பதவிக்காக வேலை சேரவும் இல்லை .. முடிஞ்சா உங்க பதவியை நீங்க தக்க வெச்சுகோங்க " என்றவள் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் போனாள்.... ஜானகிக்கு மது மீது பொறாமை இல்லை .. ஆனால் தான் வேலையை விட்டு போவதாக இவர்களுக்கு எப்படி தெரியும் என்ற கோபம்தான் ....
காபி போடா போகிறேன் என்று சென்றவள் அவனிடம் எப்படி எப்போது பேசுவது என யோசித்தாள். ஒருவழியாய் திட்டமிட்டவள் " இனி இவனை தூரம் நின்னுலாம் வழிக்கு கொண்டு வர முடியாது .... எனக்கு ரகு வேணும் " என்று சொல்லி கொண்டு உள்ளே சென்றாள்..இரண்டு நாட்களாய் அவளின் சோர்ந்த முகம் கண்ட ரகுராமிற்கு அவளின் சிரித்த முகம் பார்க்க வியப்பாக இருந்தது ..
" இவ சும்மா இருந்தாலே என்னால பார்க்கம இருக்க முடியாது ..இதுல அழகா வேற சிரிச்சு தொலையுறாளே " என்று எண்ணினான் ..
ஜானகியோ தனது செல்போனில் மதுவுக்கு குறுந்தகவல் அனுப்பினாள்.. " நான் பாஸிடம் 5 நிமிடம் தனியாக பேசணுமே "என்று....
உடனே மது ரகுவிடம் ,
" பாஸ் "
" எஸ் மது "
" நான் ஒரு அர்ஜண்ட் கால் பண்ணனும் "
" ஓகே பேசுங்க"
" பாஸ் வெளில போகணும் இப்போ நான் "
" ஏன் ? "
" ஷபா என்ன பாஸ் இப்படி கேகுரிங்க ? ரெண்டு லவர்ஸ் பேசும்போது குறுக்கே ஏன் நந்தி ? ரைட் தானே ஜானு மேம்? " என்று இருபோருளில் சொன்னாள்..
" யு ஆர் ரைட் மது .. லவ் பண்றது முக்கியம் இல்ல ..அதை அப்பபோ தனிமையை பயன்படுத்தி ப்ரூப் பண்ணனும் " என்று சிரித்தாள்.
பேசுவது ஜானகியா ? என்பது போல பார்த்தான் ரகுராம் ... ஜானகியோ அவனை பார்த்து கண் சிமிட்டினாள்.
அதற்குள் மது அங்கிருந்து செல்ல, ஜானகி ரகுவை பார்த்து பாடினாள்..
" நேற்று வரை நீயாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ "
".."
" ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று ? "
"..."
" மழை மேக வண்ணா உன் வைதேகி இங்கே
பூவை மன்றாட அன்பே உன் அருள் எங்கே ?
நாவெழும் வார்த்தையோ ரகுபதி ராமன் அன்றோ ? "
"... "
" நீ பேசிட்டு போனாலும் பேசாமல் போனாலும்
பேசிகிட்டேதான் இருப்பேன்
நோ இல்ல
நான் பாடிகிட்டேதான் இருப்பேன் "
" ஸ்டாப் இட்"
" என்னாச்சு பாஸ்? " என்று பாவமாய் பார்த்தாள் ஜானகி.
" இது பாரு ஜானகி " மிஸ் ஜானகி இப்போது ஜானகி ஆனதை கவனித்து புன்னகைத்தாள் அவள் ..
" அதைதான் பண்ணுறேன் பாஸ் ! "
" என்ன ? "
" அதான் பார்க்க சொன்னிங்களே "
கோபத்தில் பற்களை கடித்தவன் " இப்போ எதுக்கு தேவ இல்லாமல் பாட்டு பாடி சீன் போடுற ஜானகி ? உன்னால நான் பட்டதெல்லாம் போதாதா ? இனி எனக்கு இன்னொரு பிரிவு வேணுமா ? ப்ளீஸ் ஆளை விடு " என்றபடி அறையை விட்டு வெளியே சென்றான் ..
மீண்டும் அறையில் நுழைந்தவன் அழுத விழிகளுடன் ஜானகி அமர்ந்திருப்பாள் என எதிர்பார்த்ததற்கு நேர்மாறாய் புண் நகையுடன் வேலை பார்த்து கொண்டிருந்தாள்.
" என்ன மேடம் பாட்டு தூள் பறக்குது ? "-மது
" முதலில் நான்தான் பாடினேன் மது .. பாஸ் தான் என் பாட்டை கேட்க சகிக்கலைன்னு சொன்னாரு .அதான் யு டியுப் ல பாட்டு போட்டுட்டு வேலைய பார்க்குறேன் .. "
" சொல்லபோனா எனக்கும் பாட்டு பாட்டிடே வேலை செஞ்சாதான் சீக்கிரம் வொர்க் முடியும் ......பாஸ் ?? "
" சொல்லுங்க மது "
" இப் யு டோன்ட் மைண்ட் , ஜானகி மேம் கிட்ட நான் கொஞ்சம் சவுண்ட் வைக்க சொல்லவா ? "
" ம்ம்ம்ம் " என்று ஆமோதித்தவன் வேண்டுமென்றே ஜானகிக்கு முதுகுகாட்டி அமர்ந்தான் ... ஜானகியோ
" உனக்கு இளையராஜா சார் சொங்க்ஸ் பிடிக்குமா மது ? " என்றாள்..
" ஓ எஸ் ரொம்ப பிடிக்கும் .... "
" அப்போ இந்த சாங் கேட்போம் ..,. சூப்பர் சாங்.. இதை கேட்ட பிரிஞ்சிருந்த லவர்ஸ் கு கூட சேர்ந்திடுவாங்க"
" அப்படியா ? அப்படின்னா இப்போ அது ரொம்ப அவசியமே " என்று மீண்டும் இருபொருளில் சொன்னாள்.
" அச்சோ ஏன் மது ...நீ (யும் ) உன் ஆளு கூட சண்டையா ? "
" ம்ம்ம்ம் "
" இந்த பசங்களே இப்படிதான் உருகி உருகி லவ் பண்ணுவாங்க அப்பறம் நாம உருகினதும் அவங்க பனிகட்டி ஆகிடுவாங்க "