(Reading time: 22 - 44 minutes)

 

தா நிற ஷர்வானியில் ரகுவும், ஆரஞ்சு வண்ண ஷர்வானியில் திவாகரும் தங்கள் ஜோடிகளுக்கு இணையாக இருந்தனர்.

இவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என பட்டு வேஷ்டி சட்டையில் மூர்த்தியும், சந்தன நிற பட்டு புடவையில் லலிதாவும் இருந்தனர்...

அதே நிறத்தில் சின்ன வேஷ்டியை அந்த வீடு குட்டி கண்ணனுக்கு கட்டி விட்டிருந்தார்கள்...

அனைவரும் சாமி கும்பிட்டு முடிக்கவும், சரண்ராஜ் குடும்பம் வரவும் சரியாய் இருந்தது.

காலையில் மூர்த்தி வீடு, மதிய உணவு சரண் வீட்டில், மாலைமகேஷ் வீட்டில் என பேசி முடிவு செய்து வைத்திருந்தனர். நண்பர் மூவரும்.

ஸ்வேதா வான் நீல நிற டிசைனர் சாரியில் வந்தால், அது ஏற்கனவே தோழியர் மூவரும் பேசி வைத்தது தான், காலை டிசைனர் உடை, மாலை பட்டு புடவை என.

மூர்த்தி குடும்பம் சரண்ராஜ் குடும்பத்தை வரவேற்று உபசரிக்க, மகேஷின் குடும்பத்தினரும் வந்து சேர்ந்தனர்.

உடனே மது மாடிக்கு செல்ல எத்தனிக்க ரகு அவளை பட்டாசு வெடிக்க செல்லலாம் என அழைத்துக் கொண்டு மேகாவிடம் சைகையில் ஏதோ சொல்லி சென்றான்.

ஆதி பச்சை மற்றும் மாம்பழ நிறம் கலந்த ஷர்வானியில் வந்திருந்தான், தன் ஜோடியின் உடை நிறத்தை தெரிவத்த தன் புது நண்பனை தடி அவனை காணவில்லை.

எல்லாரும் உணவு உண்டு பெரியவர்கள் பேச்சில் மூழ்க, இள வட்டம் பட்டாசு வெடித்து கொண்டாட சென்றது..

ஒரு சர வெடியை வைக்க மதுவிடம் சொல்லி விட்டு ரகு படாத பாடு பட்டு கொண்டிருக்க, அவள் கைகள் நடுங்க வெடி பக்கமே செல்லாமல் வைப்பது போல் பாவனை செய்து கொண்டிருந்தாள்.

ஸ்வேதா,மேகா,தன்யா,ஆராதனா,திவாக்கர்,ஸ்ரீகாந்த் பின்னே வர தன் தேவதையை காணும் ஆசையில் ஆதி மாட்டும் முன்னே வந்தான்.

அங்கு ரகுவை பார்த்தவன் கண்களாலே நன்றி சொல்ல, அவன் அதை ஏற்று கண்களை மது பக்கம் காட்டினான்.

(என்னது ரகு ஆதி கூட எப்போ ப்ரெண்ட் ஆனான்னு நீங்க உங்க விழி விரிய குழம்பி போய் பார்க்கறது புரியுது... இரண்டு நாள் கதை கடந்து வந்திருகோமே...அந்த இரண்டு நாள் நடந்து வரலாற்று மாற்றங்கள நான் அடுத்த அத்தியயதுல சொல்றேன்...)

து மேல் பார்வையை செலுத்தியவன், அவள் அழகில் சொக்கி தான் போனான், கூந்தல் காற்றில் அலைய நடுங்கிய கைகளில் நீளமான ஊதுபத்தியை பிடித்தபடி சற்று குனிந்து நின்றவளை நோக்கி நடந்தான்.

மெல்ல நடுங்கிய கரங்களை பற்ற அவள் இவனை விழி விரிய நோக்கினாள்.இவன் ஒரு முறை அவள் கண்களுக்குள் பார்த்து விட்டு, பட்டாசை கொளுத்தி அவளையும் தன்னுடன் இழுத்து பின்னுக்கு வந்தான்.

இப்போதும் அவள் அவனை விட்டு பார்வை விலக்காமல் இருக்க, அவன் கண்கள் அவளுக்கு மட்டும் புரியும் வகையில் தன் காதலை சொல்லியது......

உங்க எல்லாரையும் கொஞ்சமேனும் திருப்தி படுத்தினேனா தெரியல... உங்க கேள்விகளுக்கு கூடிய சீக்கிரம் பதில் தரேன்..... உங்க ஆதரவிற்கு நன்றி....

காதல் பெருகும்… 

Episode # 09

Episode # 11


{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.