“தொட தொட மலர்ந்ததென்ன….. பூவே
தொட்டவனை மறந்ததென்ன…
பார்வைகள் புதிதா… ஸ்பரிசங்கள் புதிதா…
மழை வர பூமி மறுப்பதென்ன…
அந்த இல வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடி தடம் பதித்தோம் யார் அழித்தார்…
நந்தவனக்கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற்பூவை யார் பறித்தார்…
காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை…
இடைவெளி தாண்டாதே… என் வசம் நானில்லை…
தொட தொட மலர்ந்ததென்ன….. பூவே
சுடச்சுட நனைந்ததென்ன…
பார்வைகள் புதிது… ஸ்பரிசங்கள் புதிது…
நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன…
பனி தனில் குளித்த பால்மலர் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்…
பசித்தவன் அமுதம் பருகிடத்தானே…
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்…
இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே….
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே…”
அந்த பாடலின் இறுதி வரி அவனை உலுக்க, அதுவரை தொலைந்து போயிருந்த அவனது மனசாட்சி மீண்டும் அவனுக்குள் முணுமுணுக்க, தலையை குலுக்கி, தன்னிலைக்கு வந்தான்…
அவளைப் பார்த்தான்… அவள் அவனைப் பார்த்து மென்மையாக சிரித்தாள்… அது அவனது சஞ்சலத்தை அகற்றியது…
அவன் பற்றிய தனது கரத்தை புன்சிரிப்புடன் தொட்டுப்பார்த்துக்கொண்டவள், அவன் அறியா வண்ணம் அவனை பார்த்துக்கொண்டே வந்தாள் அவளது இதயத்தில் தேக்கி வைத்த வற்றாத காதலுடன்…
காதல் நதி அவர்களை அடுத்த கட்டத்திற்கு வரவேற்று தனக்குள் அழைத்துக்கொண்டது ஆர்ப்பாட்டம் இல்லாது…
”எனது உடல்நலம் காரணமாக என்னால் தங்கள் அனைவரின் இரண்டு வார கருத்துக்களுக்கு பதில் அளிக்க இயலவில்லை… அதற்கு என்னை தயை கூர்ந்து மன்னிக்கவும்…
விரைவில் பதிலளிக்கின்றேன் தங்கள் அனைவரின் கருத்துக்களையும் படித்துவிட்டு….
ஹ்ம்ம்… மீண்டும் அடுத்த வார சீதா-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்…”
தொடரும்
{kunena_discuss:739}