" இல்லடா ... அறுவடை நேரம் நெருங்கி வர்றதுனால நம்ம வேலு தாத்தா கொஞ்சம் பிசி .. வீட்டுல பாட்டி மட்டும்தான் எல்லாத்தையும் பார்த்துக்குறாங்க .. சுப்ரியும் கேரியிங் என்பதால நிறைய வேலை செய்ய முடியறதில " என்றான் .. ஆம், சுப்ரியாவிற்கு அப்போது ஐந்தாவது மாதம் .. அவள் உடல்நிலை பலவீனமாக இருப்பதினாலும், சீதோஷ்ண நிலையின் காரணத்தினாலும், இரண்டு மாதங்களாக ஊட்டியில் சிரமப்பட்டாள் சுப்ரியா .. ஆகாஷின் மூலம் விஷயம் கிருஷ்ணனை எட்டிவிட, அடுத்த தினமே ஆகாஷுக்கு போன் வந்தது தாத்தாவிடம் ..
" ஏன் அப்பு, என் பேத்தி வாயும் வயிறுமா இருந்து சிரமபடுது .. நாங்க எப்படி சும்மா விடுவோம் .. நீ பேத்தியை கூட்டிகிட்டு இங்கு வா " என்று அன்பு கட்டளையிட்டார் .. அவரின் பேச்சுக்கு இணங்கி சுப்ரியாவும் அங்கு சென்று இரண்டு மாதங்கள் ஆகி விட்டன .. அவளுக்கு உதவியாகத்தான் நித்யாவும் லக்ஷ்மியும் இன்று புறப்படுகின்றனர் .. ..
" அதுசரி .. எப்போ பார்த்தாலும் அடிச்சுகுறிங்க ..அப்படி இருக்கும்போது நித்து எங்க கூட வந்தா நீ சந்தோஷப்படுவேன்னு நெனச்சேனே " என்று போலியாய் சீண்டினான் ஆகாஷ் ..
" அட போடா.. இவ்ளோ நாள் என் கண்ணு முன்னாடியே இருப்பா உன் தங்கச்சி .. என்ன சண்டை போட்டாலும் அவளை விட்டு நான் விலகி இருந்தேனா ? அதான் இந்த ரெண்டு நாள் ரொம்ப பெருசா தெரியுது " என்றான் கார்த்தி .. அதற்குள் அங்கு வந்தார் லக்ஷ்மி அம்மா ..
" ஆகாஷ் ரெடியா ? " இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணியவன் , " ரெடிம்மா " என்று லக்ஷ்மியிடம் பேசிக்கொண்டே முன்னே சென்றான் .
" கார்த்தி "
" நித்தி "
" ஏண்டா மூஞ்சிய இப்படி வெச்சுருக்க ?"
" தெரிலடி அம்மு "
அவன் எப்போதாவதுதான் அவளை " அம்மு " என்று அழைப்பான் .. அதை உணர்ந்துக் கொண்டவள், எட்டி பார்க்க அங்கு ஆகாஷும் தாயாரும் இல்லை .. நெருங்கி வந்து அவனை அணைத்துக்கொண்டு பேசினாள் .,..
" டேய் நீ இங்க பத்திரமா இருக்குறன்னு நம்பித்தான் நான் கெளம்புறேன் .. ரெண்டு நாள் ஒழுங்கா சாப்பிடனும் பார்த்து ட்ரைவ் பண்ணனும் .. நான் உன்கிட்ட மெசேஜ்ல பேசிட்டேதான் இருப்பேன் ... சரியா ?"
" ம்ம்ம்ம்ம் " என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான் .. கொஞ்சம் இடைவெளிவிட்டு " இதுக்கு மேல தாங்காதுடீ .. சுப்ரி கு குழந்தை பிறந்ததும் நாம கல்யாணம் பண்ணிப்போம் " என்றான் .. அவள் அழகாய் வெட்கப்பட அவன் பாடு தான் திண்டாட்டம் ஆனது ..
" எப்போ இருந்து டீ இவ்ளோ சமத்தா மாறின ? "
" எல்லாம் என் அண்ணிக்கிட்ட இருந்து கத்துகிட்டதுதான் " என்றாள் உண்மையாய் ..
" ம்ம்ம் போதும்தாயே .. சிரிச்சு என் மூடை மாத்தாதே .. அப்பறம் இப்போவே தாலி கட்டிடுவேன் " என்று மிரட்டினான் அவன் ..
" எல்லாம் வாய் வார்த்தைத்தான் செயலில் ஒன்னும் காணோம் .. இப்போ கூட நான்தானே உன்னை வந்து கட்டிக்கிட்டேன் .. நீ சும்மா லுக்கு மட்டும்தானே விட்ட ?? " என்று அவனை சீண்டி விட்டு அவன் அவளை நெருங்கும் நேரம் அவனை தள்ளிவிட்டு ஓடினாள் ...
" நீயாவது திருந்திறதாவது " என்று சிரித்தான் கார்த்தி ...
" சுபீ "
" என்னங்க அத்தை ??"
" சில்சீல ' உள்ளம் வருடும் தென்றல் ' கதையை போட்டுட்டாங்க ..."
" சூப்பர் என்னாச்சு இந்த வாரம் அத்தை ? "
அதற்குள் ஏழு வயது நிரம்பிய ஸ்ரீமதி, " சுபிக்கா இங்க வா " என்று குரல் கொடுத்தாள் ..
" இருடா வரேன் .. நீங்க சொல்லுங்க அத்தை "
" அது இந்த அஷ்வினியை பிக் அப் பண்றதுக்கு நம்ம பரத் ....” என்று அவர் ஆரம்பிக்குமுன்னே
" சுபிக்கா சீக்கிரம் வா " என்று மீண்டும் குரல் கொடுத்தாள் ஸ்ரீமதி ..
"அடடே இந்த குரங்குங்க தொல்லை தாங்கல . நீங்க கிளைமாக்ஸ் மட்டும் என்னன்னு சொல்லுங்க அத்தை ..மிச்சத்தை நானே அப்பறமா படிச்சுக்குறேன் " என்றாள் சுபத்ரா ..
" நியு யெர் பார்ட்டி .. பரத் வீட்டுக்கு ல நடக்க போகுது .. இந்து நம்ம விஷ்வாவை கூப்பிட்டிருக்கு ... பரத் தம்பி அப்புவை கூப்பிட்டிருக்கார் ..."
" அய்யயோ .. அப்பறம் ? "
" அப்பறம் இன்னும் ரெண்டு வாரம் கழிச்சுதான் தெரியும் " என்றார் பானு சோகமாய் ..
" அடடே ... எப்போ பார்த்தாலும் நம்ம பீபிய ஏற வைக்கிறாங்களே ... " என்று அவள் ஏதோ சொல்ல வரவும்
" சுபீ " என்று குரல் கொடுத்தாள் ஸ்ரீமதி ..
" எங்கயாச்சும் பீல் பண்ண விடுதுங்களா ? இருடீ வரேன் .... அத்தை .. நான் இப்போ வரேன் " என்று எழுந்து சென்றாள் சுபத்ரா .. பானுவோ மீண்டும் சில்சீயில் மூழ்கினார் ..
" என்ன ஆச்சு ஸ்ரீமதி ?"
" இந்த அஷ்வின் என் கன்னத்தை கிள்ளிட்டான் .. "
" இல்ல அக்கா அதுக்கு முன்னாடி இவதான் என் கன்னத்துல கடிச்சு வெச்சா " என்றான் அஷ்வின் .
" மீரா நீ சொல்லுடா, உங்கண்ணா மேல தப்பா ? இல்ல மதி மேலயா ? " யாருக்கு சப்போர்ட் பண்றது என்று தெரியாமல் விழித்தாள் மீரா ..
" ஆமா , கணக்கு கொடுத்தேனே அதை முடிச்சிட்டிங்களா ? ரகு, மேகா ரெண்டு பேரும் என்ன ரெண்டு புக்ஸ் ல கணக்கு போடுறிங்க ? ஆதியும் மதுவும் எங்க ? "
" அது ...அது " என்று ரகு விழிக்கும்போதே, ஆதியுடன் உள்ளே வந்தாள் மது ..
" எங்கடி போன ? "
" இல்லக்கா ஆதியை நான் அறைஞ்சேன் ,அதான் அவன் என் பென்சிலை ஜன்னல் வழியா தூக்கி எறிஞ்சுட்டான் .. நான் அழுதேன் "
"அவ அழுததும் நான் சாரி கேட்டுடு பென்சிலை எடுத்து கொடுக்க போனேன் அக்கா " என்றான் ஆதி பவ்யமாய் ..
" முளைச்சு மூணு இலை விடல ..அதுக்குள்ளே நீங்க எல்லாரும் பண்ணுற ஆர்பாட்டம் இருக்கே ... இன்னைக்கு உங்க அப்பா அம்மா வரட்டும் மாட்டி விடுறேன் .. " என்றாள் சுபா..
அதற்குள் ஜீவா
" கூல் டவுன் ஜில்லு " என்றான் ..
" டேய் பொடிபையா நான் உனக்கு ஜில்லுவா ?"
" என் புருஷன் வேலை முடிஞ்சு வரட்டும் உன்னை உப்பு கண்டம் போட்டுடுவார் " என்று மிரட்டினாள் அவள் .. அவளது இடை உயரம் கூட இல்லாத ஜீவாவோ, " உன் ஹீரோ லாம் என் முன்னாடி ஜீரோ " என்றான் ..
" அப்படியாடா ? " என்று சொல்லி அவனை பின்னாலிருந்து தூக்கி சுத்தினான் அர்ஜுனன் ..
" ஹையா அர்ஜுன் அண்ணா வந்தாச்சு " என்று சிறுவர்கள் அனைவரும் அவனை சுற்றிக் கொண்டனர்.,.. அனைவரையும் கொஞ்சியவன், " பாட்டிக்கு இந்த ஸ்வீட் கொடுங்க " என்றுஅவர்களிடம் நீட்ட அனைவரும் வெளியில் ஓடினர் .. ஜீவா மட்டும் சுபீயை ஏக்கமாய் பார்த்தான்