தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த மனதை அடக்க முயன்றபடி,
"ப்ளீஸ் தள்ளி நின்னு பேசுங்க... அம்மா என்ன சொன்னாங்கன்னு ஞாபகம் இருக்குல..."
"அது ஸ்ட்ரிக்ட் ரூல்ன்னா அம்மா நம்ம இரண்டு பேரையும் இப்படி தனியா விட்டுட்டு போவாங்களா?"
"நாம மெச்சுர்ட் ஆனவங்க..."
"செல்லம்... ப்ளீஸ்... சில விஷயம் எல்லாம் ரொம்ப ஸ்பெஷல்... அது ஸ்பெஷலா தான் இருக்கனும்..."
பிரியா என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள்.
"கல்யாண நாள், பிறந்த நாள் இதெல்லாம் ரொம்ப ஸ்பெஷல்... அதே போல தான் இதுவும் ஸ்பெஷல்..."
"..."
"ப்ளீஸ் செல்லம்... சரின்னு சொல்லு..."
விக்கிராந்த் அவளை தொடவில்லை... மெல்லிய இடைவெளி விட்டு நின்றிருந்தான்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்... ராஜமிற்கு புரிந்தது!
"பெரிசா ஒண்ணுமில்லை பிரியா, நான் அப்புறம் பேசுறேன்... வைக்கிறேன்..."
அழைப்பை துண்டித்து விட்டு, போனை எடுத்து பையினுள் வைத்த ராஜமின் முகத்தில் சின்ன புன்னகை அரும்பி இருந்தது... அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவனின் தோளில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.