அதை பார்த்த சரண் மதுவை பார்த்தான்.ராகுலை அடக்கும் உபாயம் அறிந்தவள் அவள் அல்லவா???
"ராகுல்!"
"மா!"
"போகலைன்னா வரலைன்னு சொல்லிடு!டென்ஷன் ஆகாதே!"
"வரலைப்பா!"-ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான்.
"சரி.."
-மது அவனருகே அமர்ந்தாள்.
"சார்...ஏன்?உம்முன்னு இருக்கீங்க?"
"சும்மா!"-மது அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
"இன்னும் சின்ன வயசுல பார்த்த அதே கோபம் இருக்கு!"
"கூடவே பிறந்ததுல!"
"சரி..சாயந்திரம் கோவிலுக்கு போகலாம் வரீயா?"
"அடபோம்மா!"
"ஏன்டா?"
"எப்போ பார் கோவிலுக்கு குளத்துக்குன்னு!"
"எங்கே ஓடிவிடுவ?நீ வந்தே ஆகணும்!"
"அம்மா!"
"வாடா!"
"ப்பே!"-இன்னும் அந்தக் குழந்தைத்தனம் மாறவில்லை.அன்று ரகுவிடம் அடம் பிடித்தவன்,இன்று மதுவிடம் அடம் பிடிக்கிறான்!!
அன்று மாலை...
அருகில் உள்ள சிவாலயத்துக்கு சென்றனர்.
"போய் அர்ச்சைனை தட்டு வாங்கி வா!"
"இதுவேறயா?"-என்று சென்றான்.
சற்று முற்றும் வேடிக்கை பார்த்தவளின் கண்கள் தீக்ஷாவிடம் நின்றது!!ஸ்தம்பித்து போனாள்.அவள் கீதாவை போலவே இருக்கிறாள்!!
அழகாய் சிவப்பு நிற புடவையில் தலையை பின்னி,மலர் சூடி!நின்றிருந்தாள்!!!அவள் தோழி ஸ்வேதாவுடன்!!
ராகுல் அவர்களை கடந்து வந்தான்.
மதுவின் பார்வை அவளை விலகவில்லை.
"அம்மா!"
"............"
"மா!"
".............."
"மது!"-அவன் அழைக்கவும் சுயநினைவு வந்தாள்.
"எங்கே வேடிக்கை பார்க்கிற நீ?எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்!"
"ராகுல்!"
"என்ன?"
"இல்லை...ஒண்ணுமில்லை!நீ வா!"-என்று அவனை அழைத்து சென்றாள்.மதுவின் மனம் அவளிடத்தில் இல்லை!!!நான் கண்ட காட்சி உண்மை தானா?இல்லை...அது என் பிரமையா??
மதுவின் போக்கை கண்டு ராகுல் குழம்பினான்.
"அம்மா?"
"ம்...என்ன கண்ணா?"
"என்னாச்சு?ஒரு மாதிரி இருக்க?"
"ஒண்ணுமில்லைப்பா!லேசா தலைவலி!"
"தலைவலியா?வா ஹாஸ்பிட்டல் போகலாம்!"
"டேய்!தலைவலி தான்டா!"
"அதான் ஹாஸ்பிட்டல் போகலாம்!"
"அட என்னடா நீ?நானும் ஒரு டாக்டர் தான்!"
"அது ஊருக்கு...உனக்கு?"
"கண்ணா!சொன்னா கேளு!"
"அம்மா!சொன்னா கேளு!"-ஒரு தலைவலிக்கு இவ்வளவு போராட்டமா??
மது தீக்ஷாவை பற்றி மறந்து போனாள்.
ராகுல் அவளை மறக்க வைத்துவிட்டான்.
அங்கே ஒரு அழகிய சண்டை நடந்தவண்ணம் உள்ளது!!!
தொடரும்
{kunena_discuss:877}