(Reading time: 17 - 34 minutes)

திரும்பவும் அவள் இதழ் நோக்கி குனிந்தான். சரியாக அந்த நேரம் பார்த்து ப்ரியாவும் பிரபுவை அழைத்தாள். அதை பார்த்தவுடன் விலகி அமர்ந்துக்கொண்டாள் குழலீ.

சொல்லு ப்ரி!' என்று தான் தொடங்கினான். அதற்கு பிறகு என்ன பேசினாங்க அது குழலீக்கு தெரியவில்லை...

ப்ரியா... அடுத்தவன் மனைவி. ஆனாலும் 'ப்ரி' நு தான் கூப்பிடுறான்.. அவனால் அவளை மறக்கமுடியலை போலும்... அதனால் என்ன?? அவனுக்கு யாரை பிடித்தாலும் பரவாயில்லை! இதற்கு மேல் என்னால் முடியாது! இத்தனை நாள் சொல்ல முடியமல் கிடந்தவைகளை இன்று சொல்லியாகி விட்டது. என்ன செய்தாலும் அவன் தான் தஞ்சம்...'ஆனால் அவ்ள் காதலிக்கும் கணவன் மனதில் வேறு ஒரு பெண் இருக்கிறாள்.. அந்த நினைவோடு தன்னை நெருங்கினால்???'

இவற்றை நினைக்கும் போதே மனது கலங்கிவிட சட்டென்று கண்ணிலிருந்து  அருவியாய் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. 

பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போதே அவள் கண்ணீரை கண்டுவிட்டு அத்றகான காரணத்தை தவராய் புரிந்துக்கொண்டான் பிரபு.

அலுவலக விசயமாய் பேசிவிட்டு ஃபோனை அணைத்துவிட்டு அவளை பார்த்தான். 'காதல்...அது இதுனு பேசின? நான் முத்தம் கொடுத்தா கசக்குதோ??'

பிரபு... ப்ளீஸ்!!

என்னடீ??? என்னை பார்த்தா லூசு மாதிரி தெரியுதா?

பிரபு...!

பெயர் சொல்லி கூப்பிடாதேனு சொன்னேன்ல?

எப்படி கூப்பிட?

ஏன்? சிவநாதானு கூப்பிடு... சிவா.. சொல்லுவியே பிகே நு? ஏன் அத்தான் நு கூப்பிடு! செந்திலை மட்டும் தான் அத்தான்னு சொல்லுவியா?

ப்ளீஸ்!! - என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

காதல் சொல்லும் போதில் இருந்து குழலீ தன்னிலையில் இல்லை. அவளது கம்பீரம்... ஆளுமை.. திமிர்.. நேர்வு... எல்லாமே இல்லாமல் போய்விட்டது போல் இருந்தது. சராசரி பெண்ணை போல் அழுதுக்கொண்டிருக்கும் போது அவனது மனது வலித்தது.

எதுவும் பேசாமல் காரை கிளப்பிக்கொண்டு பெங்களுரை நோக்கி விறைந்தான் பிரபு!

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஆர்யன் ஆர்த்தி வீட்டிற்கு சென்றனர்.

அவர்களின் குழந்தையை ஆவலுடன் அவள் தூக்கி கொஞ்சுவதை பார்த்து கொண்டிருந்தான். மறு நாள் அலுவலக வேலையை முடித்து வந்த போது ஆர்யனும் குழலீயும் ஏதோ பேசியவாறே சமைத்து கொண்டிருந்தனர். அப்படியே பேசும் போது தான் இன்டர்வீயூவும் முடித்தார் ஆர்யன்.

சாப்பிட்டுவிட்டு கிளம்பி விட்டனர். புறப்படும் போது குழலியும் அவள் அக்கா கணவனும் கண்களால் பேசிக்கொண்டதை பிரபு கவனிக்கவில்லை.

பாதி வழியில் நெடுஞ்சாலையில் நிறுத்தி அவளை பார்த்து அமர்ந்தான்.

நான் கொஞ்சம் பேச வேணும் குழல்.

...............

நீ நேற்று சொன்னது எல்லாமே எனக்கு ஏற்கனவே தெரியும் குழலி!

அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

மலர், செந்தில், அர்ஜுன் எல்லோரும் தான் சொன்னாங்க!

என்னை பற்றி தான் உனக்கு தெரியுமே! நான் சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லை!

............

கல்யாணம் முடிஞ்சவுடனே நான் ஒரு வேலை செய்யனும் நினைச்சேன். அதை ஊருக்கு போனவுடனே செய்ய போறேன். அதற்கு உன் கையெழுத்து வேணும்!

எதுக்கு? - என்றாள் படப்படப்புடன்.

நான் ஒரு குழந்தையை தத்து எடுக்க போறேன். அதற்கு தான்!

தன் காதுகளை அவளால் நம்ப முடியவில்லை! தான் கேட்க நினைத்ததை இவன் கேட்கிறான்.. ஏதோ சொல்ல வாய் எடுக்க அவளை தடுத்து விட்டான்.

கிருஷ்ணாவை பற்றி கூற வேண்டும் என்று அவள் நினைத்தும் முடியாமல் போய்விட்டது.

ஆனால் அவன் தத்து எடுத்த குழந்ததையை பார்த்த போது ஆனந்த கண்ணீருடன் இடம் பொருள் எதுவும் பார்க்காமல் ஓடிச்சென்று அவனை இறுகி அணைத்துக்கொண்டு முகம் எங்கும் முத்த மழை பொழிந்தாள்.

இறுகி அணைத்து அவன் கண்ணோடு கண் பார்த்து 'ஐ லவ் யூ... ஐ லவ் யூ...சோ மச் சிவா அத்தான்!!!' என்றாள்.

கையில் குழந்தை கிருஷ்ணாவும் தோளில் சாய்ந்திருக்கும் மனைவியையும் ஆதரவாய் அணைத்தவாறு ஒரு விதமான மோன நிலையில் நின்றிருந்தான் பிரபு!

தொடரும்...

Episode # 16

Episode # 18

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.