இரண்டு நாட்களுக்குப் பிறகு,
“என்னடா ஜித்… ஏன் ஒருமாதிரி இருக்குற?....”
“பச்…..”
“டேய்… சொல்லுடா… ஏன் இப்படி இருக்குற?....”
“எல்லாம் எங்கப்பனாலதான்டா…” என்றான் ஜிதேந்தர் கோபமாய்…
“அப்பானாலே பிரச்சினைதாண்டா… என் வீட்டிலேயும் ஒரே இம்சை தான்… கம்பெனிக்கு ஒழுங்கா வா… பொறுப்பா இரு… அது இதுன்னு டார்ச்சர் பண்ணுறார்…”
“டேய்… தருண்… அது உன் வீட்டுல நடக்குற கதைடா… நீ இப்போ நம்ம ஜித் மேட்டருக்கு வாடா…” என்றான் ஜிதேந்தரின் மற்றொரு நண்பனான ராஜேஷ்…
“ஓ… சாரிடா… மச்சான்… அப்பான்னு சொன்னதால நான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்…” என ராஜேஷிடம் மன்னிப்பு கேட்டவன்,
ஜிதேந்தரிடம், “டேய்… மச்சி… சொல்லுடா… என்னடா பிரச்சினை உனக்கு?...” என உளறினான் தருண் போதையில்…
“அவன் தான் கேட்குறான்லடா.. சொல்லேண்டா… என்னதான் நடந்துச்சுன்னு….” – ராஜேஷ்….
You might also like - Nesam niram maaruma.. Cute family drama
“ருணதி…..” என்றான் ஜிதேந்தர் ஒற்றை வார்த்தையில்…
“ஓ… இதுதான் மச்சான் சீரியசா இருக்குறதுக்கு காரணமா?... நான் நினைச்சேண்டா ராஜேஷ் அப்பவே… இதுவாதான் இருக்குமோன்னு…” – தருண்…
“டேய்… நீ சும்மா இரு… உளறாத… உனக்கு ஓவர் ஆயிடுச்சு… சோ பேசாம இரு…. ஜித் சொல்லட்டும்…” என தருணை அடக்கினான் ராஜேஷ்…
“அவனை ஏண்டா தடுக்குற?... அவன் சொன்னதுல என்ன தப்பு… அவன் சரியாதான் சொல்லியிருக்கான்…. என் லைப்ல எனக்கு இப்போ இருக்குற ஒரே குறிக்கோள் ருணதி மட்டும் தாண்டா….” – ஜிதேந்தர்…
“புரியும்படி சொல்லு ஜித்…. இப்போ எதுக்கு நீ இவ்வளவு கோபமா இருக்குற?...” – ராஜேஷ்…
“என் அப்பா அவளை வீட்டுக்குள்ள விடமாட்டேன்னு சொல்லிட்டார்டா… அதை மீறி அவளை வீட்டுக்கு கூப்பிட்டா அவ வரமாட்டிக்குறாடா… செம கடுப்பாகுதுடா… சே….” என சொல்லிக்கொண்டே முழு மூச்சில் ஒரு பாட்டிலை காலி செய்தான் ஜிதேந்தர்…
“சரிடா…. இப்போ இதுக்கு என்ன தான் முடிவு?...” – ராஜேஷ்…
“வேற என்ன மாஸ்டர் பிளான் தான்…” என்றான் தருண்…
“டேய்… குடிச்சிட்டு உளறாதடா…” என தருணை அதட்டினான் ராஜேஷ்…
“மச்சி… நீ சொல்லுறது தாண்டா கரெக்ட்…. இனி மாஸ்டர் பிளான் போடாம எதுவுமே சரி வராதுடா… எங்கப்பனுக்கு நான் யாருன்னு காட்டணும்… அவளுக்கும் அது புரியணும்….” – என்றான் கண்களில் தீவிரத்துடன் ஜிதேந்தர்…
“ரொம்ப சரிடா… நான் இருக்கேண்டா உங்கூட….” என்றான் அரை மயக்கத்தில் இருந்த தருண்…
“டேய்… இவன் பேச்ச கேட்காதடா ஜித்… நான் சொல்லுறதை கேளு…” என்ற ராஜேஷின் வார்த்தையை சற்றும் செவி கொடுத்து கேட்காதவாறு சென்றுவிட்டான் ஜிதேந்தர்….
தொடரும்
{kunena_discuss:907}