மறுநாள் எப்பொழுதும் போல் காலை அவன் மில்லிற்கு போவதாக மீனாவிடம் போக்கு காட்டிவிட்டு அவனின் தோப்பு வீட்டிற்கு சென்றான். அவன் சென்ற சில நிமிடங்களுக்கு எல்லாம் மீனாவின் அண்ணன் அடியாட்களுடனும், மீனாவுடனும் வந்து சேர்ந்தான். அவர்கள் வந்த நேரம் தேவி வலி மயக்கத்திலும், வெற்றியும், மணியும் குடி மயக்கத்திலும் இருந்தனர்.
“என்னா மச்சான், திடீர்னு இங்க எங்க தோப்பு பக்கம் எல்லாம் வந்திருக்கீங்க”, நல்லதம்பி அவர்களைப் பார்த்த அதிர்ச்சியில் கேட்க மீனா அவனை முறைத்தாள்.
“நான் வர்றது இருக்கட்டும், வருஷத்துக்கு ஒரு வாட்டித்தான் இந்தப் பக்கம் வர்ற நீங்க இப்போ மூணு மாசமா இங்கயே டென்ட் அடிச்சு தங்கி இருக்கீங்க. என்ன மேட்டர்”
“ஐயோ அப்படி எல்லாம் இல்ல மச்சான். இவங்க ரெண்டு பேரும் என்கிட்ட வேலை பார்த்தவனுங்க. அவங்களைப் பார்த்துட்டு போகலாம்ன்னுதான் வந்தேன்”, நல்லதம்பி பம்மியபடியே பதில் சொன்னான்.
“எது இவங்களைப் பாக்க வந்தியா..... நீ இவங்க சென்னைல இருக்காங்ககன்னு இல்ல சொன்ன. அங்க இருந்து நம்ம தோப்புக்குள்ள திடீர்ன்னு எப்படி தொபுக்குன்னு குதிச்சாங்க”, மீனா கேட்க நல்லதம்பி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தான்.
You might also like - Barath and Rathi... A free English romantic series
“இங்க பாருங்க நல்லதம்பி மேல மேல பொய், பொய்யா அடுக்கிட்டு போகாதீங்க. இவங்க உங்க ஊருல இருந்து கிளம்பினதுல இருந்து, இப்போ இந்தப் பொண்ணு புள்ளத்தாச்சியா இருக்கறது வரை எங்களுக்குத் தெரியும். அதால உண்மைய ஒத்துக்கோங்க”, மீனாவின் அண்ணன் கூற, அதற்கு மேல் பொய் சொல்ல முடியாமல் நல்லதம்பியும் ஒத்துக்கொண்டான்.
“இங்க பாரு, முன்னமே நான் உனக்கு என்ன சொல்லி இருந்தேன். எவளும் உன் பேர சொல்லிட்டு வயத்த தள்ளிட்டு வரக்கூடாதுன்னு சொல்லி இருந்தேனா, இல்லையா. அதையும் மீறி நீ இப்படி செஞ்சு இருக்கேன்னா உனக்கு என்னா நெஞ்சு அழுத்தம் இருக்கும். உன்கிட்ட பணம் இருக்கப் போய்த்தானே, இப்படி எல்லாம் ஆடுற. இத்தனை நாள் உன்னை விட்டு வச்சதே தப்பு. இப்போ என்னா பண்றே. என் அண்ணன் கூட நேராப் போயி உன் பேருல இருக்க சொத்து எல்லாத்தையும் என் பேருல மாத்துற. அதே மாதிரி இனி நான் உன்னோட மில்லு, வயலு, லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் ஆளைப் போட்டு பார்த்துக்கறேன். நம்ம ஊருல இருக்க வயலை மட்டும் நீ பார்த்தா போதும். இனி எந்தப் பொண்ணு பின்னாடியாவது நீ போனேன்னு வைய்யி. நான் விதவை ஆனாலும் பரவா இல்லைன்னு உன்னைய போட்டுத் தள்ள சொல்லிடுவேன். இதை என்னிக்கோ செஞ்சு இருக்கணும். செய்யாம கோவில் மாடா திரிய விட்டுட்டேன்”, மீனா ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்து விட்டாள். அவள் பேசி முடிக்கவும் தேவி முனகியபடியே கண் விழிக்கவும் சரியாக இருந்தது. கண் முழித்தாலும் அரை மயக்கத்திலேயே அவள் இருந்ததால் அங்கு நடப்பது என்ன என்று அவளுக்குப் புரியவில்லை. மிகக் கஷ்டப்பட்டு எழுந்து கொள்ள முயன்றாள்.
தேவியைப் பார்த்தவுடன் மீனாவின் கோபம் மீண்டும் எகிறியது. அவள் அண்ணனிடம் கண்ணைக் காட்ட அங்கிருந்த அடியாட்கள் தேவியையும், மணி, வெற்றியையும் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்கள். நல்லதம்பி தேவி மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறியும், அவர்கள் நிறுத்தவில்லை. மீனா நல்லதம்பியிடம் இனி எந்தப் பெண்ணையாவது பார்த்தால் அவன் நிலைமையும் இதுதான் என்று கூறி, தேவி அடி வாங்குவதைப் பார்த்தாள்.
நல்லதம்பியின் போதைக்கு கடைசியில் ஊறுகாயாய் ஆனது தேவி. வாழ்வில் எந்தத் தவறுமே செய்யாமால் அத்தனைத் துன்பங்களை அனுபவித்து விட்டாள். ஏற்கனவே அரை மயக்கத்தில் இருந்தவள் அவர்கள் அடித்த அடியில் முழு மயக்கத்திற்கு சென்றாள். மணிக்கும், வெற்றிக்கும் முழு போதையில் ஒன்றும் தெரியவில்லை. மீனாவின் அண்ணன் அவர்களை நன்றாக அடித்துப் போட்டு விட்டு கிளம்புமாறு அவனின் அடியாட்களிடம் கூறிவிட்டு மீனாவுடனும், நல்லதம்பியுடனும் கிளம்பிவிட்டான். அவர்கள் அடித்த அடி மணிக்கும், வெற்றிக்கும் தலையில் பட போதை மயக்கத்திலேயே நரகத்திற்கு சென்றார்கள். வெற்றியிடமும், மணியிடமும் அசைவில்லை என்றவுடன் பயந்த அடியாட்கள் தேவியை குற்றுயிரும், குலயுயிருமாக விட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடினார்கள்.
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...
தொடரும்
{kunena_discuss:857}