என்ன விட்டா பேசிட்டே போற??? நீ சொல்லுறத எல்லாம் கேட்டு ஆட முடியாது என்னால....
அதேல்லாம் எனக்கு தெரியாது அத்தான்... கொஞ்சமாவது ரோஷமிருந்து பொண்டாட்டிகிட்ட வாக்கு கேட்டோமே...அதுக்காகவாது நீங்க வேலைய விட்டுட்டூ சீக்கிரம் படத்தை இயக்கி முடிக்கிற வழிய பாருங்க... இந்த நிலைபாட்டுல இருந்தீங்கனா என்கிட்ட பேசுங்க இல்லைனா வேண்டாம் அத்தான்... நான் போனை வெக்கறேன்...' என்று அவன் பதிலைக்கூட எதிர்பாராமல் பொரிந்து தள்ளிவிட்டாள்.
You might also like - Manam koithaai Manohari... A family oriented romantic story!
அதற்குபின் அவன் தன் திரைப்படத்திற்கான வேலையை முழு மூச்சுடன் முடித்துவிட்டு புது கம்பெனியின் வேலையை தொடங்கியிருந்தான். வீட்டிற்கு கூட வராமல் அயராது உழைத்தான். போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது... புது கம்பெனியின் தொடக்க வேலைகளையும் ஒரளவுக்கு முடித்திருந்தான்.
அப்போது தான் வீட்டிற்கு வரவும் கீதா அவனை போட்டோ எடுத்து அனுப்பவும் அவனை அழைத்த குழலீ... பிரபுவை கிழி கிழி என்று கிழித்துவிட்டாள். இதோ மீண்டும் இப்போது தான் மறுபடியும் இருவரும் பேசினார்கள். இந்த நிலையில் தான் கம்பெனியின் இயக்குனர்களுடன் நியூயார்கில் மீட்டிங் என்று அழைத்து சொல்ல இப்போது பிரபுவும் பயணம் செய்து கொண்டிருந்தான்.
கம்பெனியின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை உறுப்பினர்களுடன் நியூயார்க் வருவதாகவும் தங்களை வந்து ரிசீவ் செய்யுமாறும் குழலீயிடம் கேட்டுக்கொள்ள அவளும் அதற்கு தயாராய் இருந்தாள்.
தன் காதலை சொல்ல காத்திருக்கும் கணவனும் தான் காதலிக்கும் கணவனை பார்க்காமல் துடிக்கும் மனைவியும் இப்படி ஒரு சூழலில் சந்தித்துக்கொண்டால்....!!!!!!!! விளைவுகள் எப்படி இருக்கும்??? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!!!