“நீயே அப்படித்தான் நினைச்சிருக்க… அப்புறம் ஏன் மகத் அவ இத செய்யலைன்னு சொல்லுற?... எனக்கு புரியலை…”
“தாத்தா… அவ கடத்தியிருந்தா தைரியமா அங்க வந்திருக்கமாட்டா… வந்து ருணதியோட வருத்தத்தை அப்படி குரூரமா ரசிச்சிருக்க மாட்டா… அதுபோக, அவ ருணதியை காயப்படுத்தணும்னு தான் நினைக்கிறா… அது அவளால நடந்தா என்ன?... இல்ல வேற யார் மூலமா நடந்தா என்ன?... அவளுக்குத் தேவை ருணதி காயப்படணும்… அவ்வளவுதான்…”
“ஓ… அப்போ யாருதான் இந்த காரியத்தை செஞ்சிருப்பா மகத்?...”
“அதைத்தான் தாத்தா நானும் யோசிச்சிட்டிருக்கேன்… கன்யா இதை செய்யலைன்னா, கண்டிப்பா ருணதிக்கு வேண்டாதவங்க யாரோதான் இதை செஞ்சிருக்கணும்…”
“ருணதிக்கு வேண்டாதவங்களா?... அது யாரு மகத்?...”
“என்னோட யூகம் சரின்னா…. அது…” என அவன் மௌனம் சாதிக்க,
“யாரு மகத்…. சொல்லு….” என அவர் அவசரம் படுத்த,
அந்நேரம் மகத்-ன் செல்போன் ஒலிக்க,
You might also like - Oru kootu kiligal... A family drama...
எடுத்து பார்த்த போது, “விஜய்…” என்று வர,
“சொல்லுங்க விஜய்… எப்படி இருக்கீங்க?...”
“நல்லா இருக்குறேன்… டாக்டர்… நீங்க எப்படி இருக்கீங்க?... குழந்தைங்க எப்படி இருக்குறாங்க?...”
“நல்லா இருக்குறாங்க விஜய்… சொல்லுங்க விஜய்… எதும் முக்கியமான விஷயமா?...”
“ஹ்ம்ம்… அப்படி எல்லாம் எதுவுமில்லை… நீங்க இப்போ எங்க இருக்குறீங்க?...”
“நான் இப்போ சென்னையில் ஹாஸ்பிட்டலில்… இருக்குறேன்…”
“அப்போ ரொம்ப நல்லதாப் போச்சு… நான் சென்னை இப்போதான் வந்தேன்… உங்க ஹாஸ்பிட்டல் அட்ரஸ் சொல்லுங்க… நான் அங்கேயே வரேன்…”
அவனும் தகவல் சொல்லிவிட்டு போனை வைத்தபோது,
“யாரு மகத்?... அந்த போலீஸ் தம்பியா?...”
“ஆமா தாத்தா… அவர்தான்…”
“என்ன விஷயமா இங்க வர்றார்?... அந்த கடத்தல் காரங்க பத்தி எதுவும் தெரிஞ்சதா?...”
“தெரியலை தாத்தா… அவர் எதுக்கு வர்றார்னு…”
“சரி அத விடு… நீ சொல்லு… ருணதிக்கு வேண்டாதவங்க யாரு இத செஞ்சது?...”
“தாத்தா… அது…”
“அது யாரு மகத்?...” என அவர் கேட்க
“அது வேற யாருமில்லை… என் கூடப்பிறந்தவன் தான்…” என்றபடி வந்து நின்றான் விஜய்…
தொடரும்
{kunena_discuss:907}