(Reading time: 27 - 54 minutes)

வளோ இவர்களது எங்கேஜ்மென்ட் ஃபோட்டோக்களை எதிர்பார்த்துக் கொண்டே மெயில் ஐடியை திறந்தாள். ‘அது என்ன அதைப் பார்த்த பிறகுதான் பேசுவேன்னு….பேசி முடிச்ச பிறகு பார்த்துக்க மாட்டனாமா?...’ இவளுக்கு அவனிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் போது அவன் அப்றம் பேசுறேன் என சொல்லியது ஏமாற்றமாக இருந்தது நிலவினிக்கு.

உள்ளுக்குள் புலம்பியபடி அவள் மெயில் ஐடியை ஓபன் செய்து,  அவனது மெயில் ஐடி என புரிந்த அடியில் இருந்து வந்திருந்த மெயிலை இவள் க்ளிக் செய்ய….அது திறந்து விரிய…. மெயிலின் கன்டன்டை விட கீழே அட்டாச் செய்யப் பட்டிருந்த ஃபோட்டோக்கள் இவள் கண்களை பிடித்திழுக்க முதலில் அதன் மீது சென்று வைத்தாள் தன் கவனத்தை…..

 அதிர்ந்தும் அரண்டும் மிரண்டும் போனாள் கண்ணில் பட்ட காட்சிகளில்…..அவன் அணைப்பில் இருந்தாள் இவள்….இரண்டு ஃபோட்டாக்கள்…. இவள் கீழே அவன் இவள் மீது கவசமாய்…. அனைத்துமே  இவள் முகத்தை தெள்ளத் தெளிவாக காண்பித்தன…. ரோவரைப் பார்த்து பயந்து இவள் பரனிலிருந்து கீழே விழுந்தாள் அல்லவா அந்த நேரத்து ஃபோட்டோக்கள்….

எப்படி எடுத்தான் இவைகளை அவன்? எதற்கு எடுத்தான் அவன்…? இப்பொழுது எதற்கு இவளுக்கு அனுப்பி இருக்கிறான்????

அப்படி அவள் ரோவரைப் பார்த்து பயந்து பதறி பரனில் நின்ற போது, யவ்வன் அங்கே வரும்போதே கூல்மேன் என்றபடி கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் வந்தது ஞாபகம் வருகிறது இவளுக்கு….

காவலுக்கு இருக்கும் நாய் ஆள் இல்லாத இடத்தில் குரைக்கும் போது எப்படி பதற்றமில்லாமல் வந்தான் இவன்????

ஆக வந்திருப்பது இவள் என அவன் பார்த்திருக்க வேண்டும்….எப்படியோ கேமிராவை வைத்து இவள் அங்கு வந்ததற்கு  சாட்சி உண்டு பண்ணி அதை வைத்தே இவளை மிரட்டி…..மிரட்டதானா?

ஆனால் வேறு எதற்காக அவன் ரகசியமாக ஃபோட்டோ எடுக்க முயன்றிருக்க முடியும்? அவனுக்கு எதிர்பாராதவிதமாக இப்படி ஒரு காட்சி கேமிராவில் கிடைத்திருக்க வேண்டும்….

இப்படி அவன் எதுவும் திட்டமிடாமல் எப்படி இப்படி அந்த நொடி நேர நிகழ்வை…அதுவும் அந்த ஒன்னும் இல்லாத வெத்து ஷெட்டில் நடந்த ஒன்றை போட்டோ எடுத்திருக்க முடியும்? சிசிடிவி கேமிரா பதிவு போல் அத்தனை தெளிவில்லாமல் கூட இல்லை இது…..அத்தனை தெளிவாக….

வலியும் பயமும் உயிர்வரை கனன்று கனன்று இறங்க….  நம்பவும் முடியாமல்…கண் முன் இருப்பதை நம்பாமல் இருக்கவும் முடியாமல்….மெயில் கன்டன்டை வாசிக்கப் போனாள்….என்ன சொல்லி மிரட்டி இருக்கான்??? வேற என்னவா இருக்கும் கல்யாணத்துக்கு ஒத்துகலைனா கண்டிப்பா இதை வீட்ல காமிச்சிடுவேன்….வெளில காமிச்சிடுவேன்….இப்டி எதாவது சொல்லிருப்பான்…

எண்ணிக் கொண்டே இவள் கண்களை அதன் மீது ஓட்ட..

‘வினி கீழ இருக்ற ஃபோட்டோஸெல்லாம் பாரு….அதை வேற யார் பார்த்தாலும் பார்த்தவுடனே….’ என தொடங்கியது அந்த மெயில்….அதற்கு மேல் அவள் கண்ணில் கட்டி உருண்ட நீரும்…. உயிரில் துடி துடித்த வலியும்…..இவன் இப்படிப் பட்டவனா என்ற ஏக ஏமாற்றமும்…. இப்டி போய் இவன்ட்ட மாட்டிடனே என்ற தாங்கொணா தவிப்பும்….தீயை தின்றவள் போல் உள்ளுக்குள் வெந்து போனாள் நிலவினி

இந்த ஃபோட்டோவ இவன் வெளிய காமிச்சா? அதற்கு மேல் அவளால் யோசிக்க கூட முடியவில்லை…..

அதுவரை அவளுக்கு திருமணத்தில் நுழையதான் பயம் மனதடை எல்லாமே…..மத்தபடி யவ்வன் மீது எந்த வித கோப சீற்றங்களும் இல்லைதான்….அவனுக்கு திருமணத்தில் உடன்பாடில்லை என அவன் சொல்ல மறுத்த போதுகூட அவனை ஏனோ அவளால் வெறுக்க முடியவில்லை…..ஆனால் இப்போது தன் அடி மனதிலிருந்து அவனை வெறுப்பதாக அருவருப்பதாக உணர்ந்தாள் நிலவினி….

‘ஐ அக்ரி ஃபார் திஸ் மேரேஜ்….’ யவ்வன் நம்பருக்கு  ஒரு மெசேஜ் அநுப்பி வைத்தவள்……இல்லைனா இவள் ஒத்துக் கொண்டது தெரியாமல் இந்த ஃபோட்டோவை வைத்து அவன் எதாவது செய்து விட்டால்…. ஆக தன் சம்மதத்தை எழுத்து வடிவில் அனுப்பி வைத்தவள்….அப்படியே தூக்கி எறிந்து சிதறடித்தாள் தன் மொபைலை….

அன்று அவள் அழுத அழுகையில் அவளுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது அடுத்த நாள்….

வ்வனுக்கோ நடந்த எதுவும் சரியாக புரியவில்லைதான்….ஆனால் சந்தேகம்  கேட்கதான் வழி இன்றி போயிற்று. நடந்தது இதுதான். அவனுக்கு நிலவினி அவனை விரும்புகிறாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை….அவள் எதையோ எண்ணி பயந்து குழம்புகிறாள் என்பது தான் அவன் புரிதல்…..

கொண்டல்புரத்திலிருந்து கிளம்பும் சற்றுமுன் வரை திருமணத்திற்கு முழு சம்மதம் என்பது நடந்து கொண்டவள் அடுத்து பயந்து நடுங்கியதை கண்டவன் கைகளுக்கு இந்த ஃபோடோஸ் கிடைத்தன….

ஆக்சுவலி அந்த ஷெட்…அதாவது நிலவினி ரோவருக்கு பயந்து பரணேறிய அந்த ஷெட்…அங்குதான் இவனது பண்ணையிலிருந்து லோடாகி கிளம்பும் கன்டெய்னர் லாரிகள் எடை பார்க்கப் பட்டு வெளியே கிளம்பும்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.