அன்று ஞாயிற்றுக் கிழமை. அனுவைப் பார்க்க முடியாது என்று நினைத்துக் கொண்டு சோகமாய் நின்றிருந்தான் விஷ்ணு. ஆனால் விஷ்ணுவின் நினைப்பைப் பொய்யாக்கும் விதத்தில், திவ்யாவின் இரு சக்கர வாகனத்தில் திவ்யாவும், அனுவும் அவனைக் கடந்து சென்றனர். விஷ்ணுவிற்கு மற்றற்ற மகிழ்ச்சி. அவர்களைப் பின் தொடர்வதைத் தவிர அவனுக்கு வேறு என்ன வேளை.
அவர்களும் ஸாப்பிங் என்ற பேரில் கடை கடையாக ஏறி இறங்க இவனும் அவர்களைப் பின் தொடர்ந்து கடை கடையாகச் சுற்றி திரிந்தான். அவ்வப்போது அவர்கள் கண்ணிலும் பட்டு மறைந்து கொண்டிருந்தான். விஷ்ணுவைப் பார்க்கும் போது எல்லாம் அனுவிற்கு ஏனோ மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தாலும் திவ்யா இருந்ததால் எதுவும் அவள் காட்டிக் கொள்ளவில்லை.
அதே சமயம் திவ்யாவிற்கோ விஷ்ணு கண்ணில் படும் போதெல்லாம் கோபமும் ஆத்திரமுமாக வந்தது. இருந்தாலும் தன் தோழிக்காக பொறுத்துக் கொண்டாள்.
எவ்வளவு நேரம்தான் அவளின்ப் பொறுமையும் தாக்குப் பிடிக்கும். மதியத்திற்கு மேல் சென்னை வெயில் போலவே அவளும் கோபத்தில் காய்ந்து கொண்டிருந்தாள். பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று பொங்கி எழுந்துவிட்டாள்.
விஷ்ணுவைப் பார்த்து வருமாறு கை அசைத்தாள். பக்கத்தில் இருந்த அனு “ஏன்டீ அவர கூப்பிடுறே” என்று சின்ன குழந்தை போல் திவ்யாவை பார்த்துக் கேட்டாள்.
“எல்லாம் எனக்குத் தெரியும் நீ சும்மா இரு” என்று தன் தோழியை அடக்கிவிட்டு மீண்டும் விஷ்ணுவைப் பார்த்து வா என்பது போல் கை அசைத்தாள்.
“டேய் விஷ்ணு, பத்ர காளி கூப்பிடுற, நீ செத்த” என்று புலம்பிக் கொண்டே அவர்களை நோக்கி நடந்தான் விஷ்ணு.
தொடரும் . . .
{kunena_discuss:906}