அப்படீங்களா மேடம் சரிங்க மேடம் பேச்சை மாத்தாம விஷயத்துக்கு வாங்க டைம் ஆகுது என்று அவள் கால்களை இன்னும் பிடித்து விட ..
போதும் ஆதி விடுங்க நான் சும்மா தான் சொன்னேன் என்று சொல்ல
தெரியும் சிக் பட் பரவாயில்லை நீ சொல்லு அதுவரைக்கும் ஆதி உனக்கு சேவகம் பண்றேன் என்று சிரித்த படி சொல்ல அவன் தலை முடியை கலைத்து விளையாடியவளோ இல்ல ஆதி நான் உங்க மேலே சாஞ்சிட்டே சொல்லணும் ..என்று சொல்ல தன்னோடு சாய்த்து கொண்டவன் சொல்லுடா என்ன சொல்லபோகுதாம் இந்த சண்டை கோழி என்று சொல்ல அவளோ உமா அண்ணி சொன்னாங்க ஆதி ........நீங்க என் மேல வெச்சிருந்த காதல சொன்னப்போ நா கண் முழிக்கல
ஆனா வில்லன் கணக்கா பேசினதுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
அது படி அவருக்கு ரெண்டு கல்யாணம் நடக்கணும் தோஷ நிவர்த்தி எதுவும் நீங்க பன்னல அதான் எல்லாத்துக்கும் காரணம் ..தானா கழண்ட தாலிய திரும்ப குல தெய்வம் கோவில்ல பரிகாரம் செஞ்சு கல்யாணம் பண்ணிடுங்க சரியா போயிடும் என்று அவர் சொல்ல
முதல் தடவையும் பரிகாரம் பண்ணிதான் செஞ்சோம் என்றாள் ஜெயா பாட்டி .