இல்ல உமா குட்டி உங்க பாசத்தை சொல்ல வந்தேன் .......
ஹய்.......! நானும் குட்டியா ,.....,சூப்பர் தாத்தா ....இத்தனை நாள் மனோ மேல ரொம்ப பொறாமையா இருந்துச்சு ....இப்ப போயிடுச்சு ....என்று உமா கண் சிமிட்ட .......
உண்மைய சொல்லட்டுமா உமா , உன்ன இப்படி கூப்பிடனும்னு சொன்னதே மனோ தான், எனக்கு அவ என்னிக்குமே ஸ்பெஷல் தாண்டா என் ஜெயாவ எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காளே ......
பாட்டி தாத்தாவை கிள்ள மற்ற நால்வரும் சிரித்து மகிழ மனோவும் , ஆதியும் மட்டும் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாது இருந்தனர்.
அவ்விடம் விட்டு அகல தயாரான ஆதியிடம், டேய் ஆதி நில்லுடா ........... என்றான் சங்கர்
நாங்க இப்ப கிளம்பறோம் டா ......
..............
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமல் இருந்தது பாட்டி மட்டும் தான் என்று வியந்த படி தன் அறைக்கு சென்றான் ஆதி.
பகல் முழுக்க மனோகரியிடம் ஏதும் பேசவில்லை அவன் ..தன் மகளை கூட காணவில்லை ....இவள் பேச வந்தாலும் முகம் காணாது ...அவ்விடம் விட்டு அவன் சென்று விட கோபமும் கடுப்பும் தலைக்கு ஏறியது மனோகரிக்கு