“உங்க கணவர் எல்லா விதத்திலும் அவருக்கும் விமலாக்கும் எந்த பிரச்சனையும் பண்ணாத குடும்பமா பார்த்து இருப்பார். இவங்க வந்து மாட்டிக்கிட்டாங்க. சரிம்மா, அந்த டிவி ப்ரோக்ராம் வந்தே ஒரு வாரம் ஆகுது, அது ரெகார்ட் பண்ணி கிட்டத்தட்ட ரெண்டு, மூணு வாரம் ஆகிடுச்சு. இத்தனை நாள் விட்டுட்டு இப்போத் திடீர்ன்னு எல்லா உண்மையும் சொல்ல வந்துட்டீங்க. அப்படி சாதுவா அதுவும் அவங்க போதை மருந்து வித்தவங்கன்னு தெரிஞ்சும் சும்மா இருந்த உங்களுக்கு கோவம் வர்ற அளவுக்கு உங்க கணவரும், பொண்ணும் என்ன பண்ணினாங்க,”
“இவர் உண்மை எல்லாம் என்கிட்ட சொன்ன பிறகு எனக்கு வந்த கோவத்துக்கு அளவே இல்லைம்மா. நான் நல்லாக் கத்தி விட்டுட்டேன். அதுவும் விமலாவையும் அவர் இதுல சேர்த்து விட்டு இருக்கார்ன்னு தெரிஞ்சதும் இன்னும் கோவம் ஜாஸ்தி ஆகிடுச்சு. ஆனால், விமலா, அவங்க அப்பா ரெண்டு பேரும் அது எல்லாம் வேலை போன நேரத்துல பணம் பத்தாதுனால பண்ணினது. இப்போ விமலாக்கு வேலை கிடைச்சப்பறம் அதெல்லாம் விட்டாச்சு. அதனாலதான் அவளுக்கு மாப்பிள்ளை கூட பார்க்க ஆரம்பிச்சேன்னு சொன்னார். நான் ரெண்டு பேரையும் நல்லாக் கத்திட்டு இனியாவது ஒழுக்கமா இருக்கப் பாருங்கன்னு சொன்னேன். அவங்களும் எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு, வீட்டுல அப்படியே அடங்கி இருக்கறா மாதிரி இருந்துட்டு விமலா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி இருக்கா”
“உங்கள ஏமாளின்னு சொல்றதா இல்லை என்ன சொல்றதுன்னே தெரியலை. படிச்ச நீங்களே இப்படி மறுபடி மறுபடி ஏமாந்து இருக்கீங்க”
“குடும்பம்ன்னு வரும்போது அறிவை விட மனசுதான்ம்மா நிறைய நேரம் வேலை செய்யும். இங்கயும் தப்பே பண்ணி இருந்தாலும் விமலா என் பொண்ணு. அவ இனியாவது நல்லா இருக்கனும்ன்னு நினைச்சேன்”
“அப்படி மனசு சொன்னதைக் கேக்காம இப்போத் திடீர்ன்னு அறிவு சொன்னதைக் கேக்கணும்ன்னு உங்களுக்குத் ஏன் தோணிச்சு. எங்க கிட்ட எப்படி உண்மை சொல்ல வந்தீங்க”
“அது வந்து... அது வந்து..... என் வாயால எப்படி சொல்லன்னு கூடத் தெரியலைம்மா. அவ இப்போ பண்ணிட்டு இருக்கற தப்பை பார்க்கிறப்போ எனக்கு அவளை வெட்டி போடலாமானு ஆத்திரம் வருது. ஆனால் அதனால பிரச்சனை தீராதே. விமலா எப்பவும் அவளோட போனை அவக்கூடவேதான் வச்சுப்பா. குளிக்கப் போகும்போது கூட அது அவக்கூடத்தான் இருக்கும். ஒரு மூணு நாள் முன்னாடி ஹால்ல உக்கார்ந்து போன்ல ஏதோ நோண்டிட்டு இருந்து இருக்கா. நான் மாடில துணி காய போட்டுட்டு இருந்தேன். அவங்க அப்பா கூப்பிட்டாங்கன்னு போனை off பண்ணாம வச்சுட்டு போய்ட்டா. நாங்க யாரும் அப்போ வர மாட்டோம்ன்னு நினைச்சுட்டா போல. நான் துணி காய வச்சுட்டு கீழ வரும்போது அவ போன் அடிச்சுது. அது இப்போ வர்ற டச் மாடல். நான் அவக்கிட்ட கொடுக்க போன் எடுக்கும்போது தவறுதலா கைப்பட்டு போட்டோ ஓபன் ஆகிடுச்சு, அதுல.... அதுல.....”, அதற்கு மேல் சொல்ல முடியாமல் அழ ஆரம்பித்தார் சாவித்ரி.
“அழாதீங்கம்மா. நீங்க இத்தனை வேதனைப்படறதைப் பார்த்தா ரொம்ப பெரிய விஷயம் மாதிரித்தான் தெரியுது. எதுவா இருந்தாலும் மனசை தேத்திட்டு சொல்லுங்க. உங்க பொண்ணால, எத்தனை பேர் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்குன்னு பாருங்க. நீங்க சொல்ற உண்மையால இனி அந்தப் படுகுழில விழப்போற பசங்களையாவது காப்பாத்தலாம் இல்லையா”, சாவித்ரியை தேற்றினாள் தேவி.
“நீங்க சொல்றது சரிதானம்மா, படு குழிதான். அந்தப் பெண்கள் தெரிஞ்சு விழுந்தாங்களா, இல்லைத் தெரியாம விழுந்தாங்களா தெரியலை. அதுல இருந்த போட்டோஸ் எல்லாம் பெண்களை நிர்வாணமா எடுத்த போட்டோஸ்”, சொல்லிவிட்டு சாவித்திரி அழ இந்த முறை அதிர்ச்சியின் உச்சத்திற்கு மற்றவர்கள் போனார்கள்.
தொடரும்
{kunena_discuss:857}