ஆனால் ஒவ்வொரு நிலையிலும் ஆதித்யன் தான் ஒரு முழுமையான ஆண் மகன், உண்மையான காதலன், நல்ல நண்பன், பாசமான உறவினன் என்பதை நிரூபித்தான் மெய்சிலிர்த்த கால தேவர் தனது தோல்வியை இன்பமாக ஏற்றார். பெருமையோடு ஈசனை காண சென்றார். ஒன்றை மட்டும் உறுதியாக மனதில் எண்ணிய படி
இறைவன் ஒரு உன்னத பணியை இவர்களிடத்தே ஒப்படைக்க உள்ளார்.
மனோகரி தன் குடும்பத்தினருக்கு ஏதேனும் என்றால் தாங்க மாட்டாள்.
மனோகரிக்கு ஏதேனும் என்றால் ஆதி தாங்க மாட்டான்.
ஆதிக்கு ஏதேனும் என்றால் ஈசன் தாங்க மாட்டார்.
பின் அவரின் கோபத்திற்கு தான் ஆளாக நேரிடும். எனவே மனோகரியின் வாரிசுகளையும் அவளின் குடும்பத்தையும் யாதொரு தீங்கும் தீண்டாத படிக்கு, இயன்ற அளவு அவள் உறவினரை காக்கும் பொறு
...
This story is now available on Chillzee KiMo.
...
>
‘நியூஸ் கேட்டீங்களா..?’ ஆதி என்றாள்.
‘இப்ப அது ரொம்ப முக்கியம்’ என்றபடி தன் வேலையை அவன் கவனிக்க தொடங்க
அவள் விடாமல் ‘இது உங்களுக்கு ஷாக்கா இல்லை..?’ என்றாள்
‘அவன் செஞ்ச தப்புக்கு அர்ரெஸ்ட் ஆயிருக்கான் அதுக்கு நான் ஏன்டி ஷாக் ஆகணும்?’ மீண்டுமாய் அவன் முயற்சி செய்ய