ஏழாம் மாதத்தில் உமாவிற்கு ஆதியின் வீட்டிலேயே விமர்சையாக சீமந்தம் முடிய, அவளுக்கு அங்கேயே பிரசவம் நடக்க வேண்டும் என்று பிடிவாதமாய் ஆதியும், மனோவும் கூற, வேறு வழியின்றி சங்கரும் ஒத்துக்கொண்டான். மனோவிற்கும், உமாவிற்கும் மூன்று நாள் இடைவெளியில் பிரசவம் நடக்க கூடும் என்றது மருத்துவ அறிக்கை.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் சங்கர் உமாவை காண சென்னைக்கு வந்துவிடுவான். அவளிடம் எதோ வருடக் கணக்கில் பிரிந்திருந்தது போல் காதலை வெளிப்படுத்துவான். தினமும் கணக்கில்லா போன் கால்கள். மனோவே உமாவை கிண்டலடிக்க
“ஏன் சங்கர் இப்படி நிமிஷத்துக்கு ஆயிரம் போன் பண்றீங்க ...? நான் ஒரு கைனக்காலஜிஸ்ட் நினைவு இருக்கா? இங்க எல்லோரும் என்னை எப்படி ஓட்டுறாங்க தெரியுமா? எனக்கே நீங்க பண்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
சங்கர்.
சங்கர் உமாவின் இரு பிள்ளைகளில் ஒருவனை தூக்கிய முத்து கண்களில் நீர் கோத, சங்கரா சரண் நம்மகிட்ட வந்துட்டான் என்று சொல்ல, புரியாத சங்கரோ அப்போது தான் முத்து பார்த்த அவ்விடத்தை தானும் பார்த்தான் சரணிற்கு பின் கழுத்தில் இருந்தது போன்ற அதே மச்சத்தோடு பிறந்திருந்தான் சங்கரின் மகன்.