மனோமா என்று அழைத்து அவன் என்ன சொன்னாலும் சரி அதை அவளால் மறுக்க இயலாது..அந்த வார்த்தையை அவன் உச்சரிக்கும் விதம் அவளை மறுக்க விடாது.
எனவே தன்னை நேர்த்தியாக அலங்கரித்தபடி அவள் ஹாலுக்கு வர அங்கே விநாயக் அகல்யா, சங்கர் உமா, அனைத்து குட்டீஸ், தாத்தா பாட்டி, முத்து, ஆதி என அனைவரும் தங்களை அலங்கரித்த படி இருக்க, மனோகரிக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் யாருமே அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்தை சொல்ல வில்லை. மூன்று வாகனங்களில் அனைவரும் பயணத்தை தொடர, மனோகரி ஆதி மட்டுமே ஒரு காரில் செல்ல, ‘எங்க போறோம் ஆதி?’ என்று மனோ கேட்க, “இப்பவாவது கேட்டியே, என்ன மனோ ஆச்சு உனக்கு? இந்த ரூட் எதுன்னு உனக்கு தெரியல” என்ற அவனின் பதிலில் தான் கவனித்தாள் அது தன் வீட்டிற்கு செல்லும் வழி என்பதை,
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப்படம் அவளை புன்னகையுடன் வரவேற்றது ...அவள் நினைவில் அம்மாயி சொன்ன வார்த்தைகளும் தாமாய் எழுந்தன..
“இத பாரு அம்மாயி ரொம்ப என்ட்ட வம்பு வெச்சிக்காத காலம் போன வயசுல நான் தான் உனக்கு கஞ்சி ஊத்தணும் நியாபகத்துல வெச்சிக்கோ என் வீட்டுக்கு வந்தா நான் தான் உன்னை கவனிக்கணும் புரிஞ்சு நடந்துக்கோ