அவன் நினைவுகள் அன்று மனோ அலறிய அலறலை எண்ணியது. அதுவரை அவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அனுமானித்தவன் அதை எவ்வாறு அறிவது என்ற வழி தெரியாமல் தவித்தவன், அமைதியாக அவளை சந்தித்த நாள் முதல் அவள் செய்கைகள், அவள் வளர்ந்த சூழல், சங்கரிடம் இருந்து அவளை பற்றி அறிந்த தகவல்கள், என தனக்கு தெரிந்த வரை அனைத்தையும் யோசித்து யோசித்து பட்டியலிட்டவன் ஒரு முடிவுக்கு வந்தான்.
அவளால் சொல்ல இயலாத ஒரு பிரச்னையை தன்னுள் புதைத்து இருக்கிறாள் என்று தீர்மானத்திற்கு வந்தான்.ஆனால் அது என்னவாக இருக்கும் என்பதை அறிய முடியாத நிலையில் தான் அன்று நன்றாக உறங்கி கொண்டு இருந்தவள் அலறினாள்.. செண்பகா அக்கா,
செண்பகா அக்கா என்று அலறி எழுந்தவள் உடல் நடுங்க கட்டிலின் விளிம்பில் அமர்ந்
...
This story is now available on Chillzee KiMo.
...
் கொண்ட மனோ, வேண்டும் என்றே ஆதி தன்னை புறக்கணிக்கிறான் என்று தெரிந்தும் எப்படி பொறுமை காக்க முடிகிறது?
அவனே சொல்லட்டும், சொல்வான் அவன், அதுவரை நான் அவனை தொந்தரவு செய்ய போவதில்லை என்ற தீர்மானத்தை எப்படி எடுக்க முடிந்தது அவளால் ..?
இன்னும் இரண்டு தினங்களில் அவள் பிறந்த நாள்.