(Reading time: 29 - 58 minutes)

பிருத்வி அவன் அறைக்கு சென்று உடை கூட மாற்றாமல் அப்படியே கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தான்... கொஞ்ச நாட்களாக இதுதான் அவன் வாடிக்கையே... அப்போது அவன் மொபைலுக்கு அழைப்பு வந்தது... பார்த்தால் திரையில் சப்னா என்று ஒளிர்ந்தது...

அப்போது ஒரு சலிப்பு தான் வந்தது பிருத்விக்கு... அந்த சலிப்போடு அந்த அழைப்பை ஏற்றான்...

"ம்ம் என்ன சப்னா... நான் தான் எனக்கு போன் பண்ண வேண்டாம்னு உன்கிட்ட சொல்லியிருக்கேன் இல்ல... ஏன் இப்படி தொந்தரவு செய்ற..." என்று கோபப்பட்டான்...

"இல்லை பிருத்வி... நாளைக்கு சண்டே இல்ல... எங்கேயாவது வெளிய போலாம்னு கேக்க தான் போன் செஞ்சேன்... பிருத்வி எனக்கு தெரியும் யுக்தா செஞ்ச தப்புக்கு எல்லோரும் உங்க மேல கோபப்பட்றாங்க... நீங்க தனியா ஃபீல் பண்ணுவீங்கன்னு எனக்கு தோனுச்சு பிருத்வி... அதான் உங்கக் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு நினைக்கிறேன்.. என்னை ஒரு ஃப்ரண்டா கூட நீங்க அக்செப்ட் பண்ணிக்கக் கூடாதா.." என்று சப்னா கொஞ்சலாக பேசினாள்...

"எனக்கு அப்படி  எந்த பிரச்சனையும் இல்ல... நான் ஏற்கனவே சொன்னது தான்... உனக்கு ஒரு நல்ல லைஃப் அமையனும்.. அதனால நாம தொடர்ந்து போன் பேசறதோ... இல்லை மீட் பண்றதோ சரியில்ல... இனிமே எனக்கு போன் பண்ணாத.." என்று போனை கட் செய்துவிட்டான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

"சேச்சே... யுக்தா வீட்டில் இல்லாத இந்த சமயத்திலாவது பிருத்வியோடு பழகி அவனை வழிக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்தால்... இவன் வழிக்கு வரமாட்டேங்கிறானே.." என்று குறைப்பட்டுக் கொண்டாள் சப்னா.

சப்னா போன் காலை கட் செய்தவன் உடை மாற்றலாம் என்று எழுந்த போது பிரணதி அவன் அறைக்கு வந்தாள்... அதைப் பார்த்த அவன்..

"என்ன பிரணா... ஏன் அங்கேயே நிக்கற.. உள்ள வா.." என்றான்.

உள்ளே வந்த அவள் கட்டிலில் உட்கார்ந்தாள்... அவனும் உட்கார்ந்தான்... பின் தயக்கத்தோடு பிருத்வியிடம் பேசினாள்...

"அண்ணா நிஜமாவே இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மதமா... இல்லை அபபா அம்மாக்காக ஒத்துக்கிட்டியா..."

"இல்லை பிரணா அப்படியெல்லாம் எதுவுமில்ல... வரூன் இந்த வீட்டு மாப்பிள்ளையா வர்றதுல எனக்கு சந்தோஷம் தான்... சப்னா விஷயத்துல அவன் நடந்துக்கிட்டதுல எனக்கு அவன் மேல கோபம் இருந்துச்சு தான்... ஆனால் அதுக்காக அவன் தப்பானவனெல்லாம் இல்ல.. அதனால எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தான்..." என்று அவன் சொல்லும் போது பிரணதி அழுதுவிட்டாள்..

"பிரணா ஏன் அழற என்று அவன் சமாதானப்படுத்தும் போது...

"இல்லண்ணா... அம்மா அப்பாவை விட நீ தான் எனக்கு க்ளோஸ்... இருந்தாலும் வரூன் விஷயத்துல நீ என்ன சொல்லுவொயோன்னு பயந்து... இதுல அண்ணியை சம்பந்தப்படுத்தி... இதனால் பிரச்சனையாகி... அண்ணியும் வீட்டை விட்டுப் போக நான் தான் காரணம்... இப்போ என்னோட நிச்சயத்துக்கு அண்ணியும் இல்லை... இதுல உனக்கு என்மேல கோபம் இல்லையாண்ணா..??"

"இதுக்கு முழு காரணம் நான் தான் பிரணா.. அது தெரிஞ்சும் நான் எப்படி கோபப்படுவேன்... எனக்கு உன்மேல கோபமெல்லாம் இல்லை... அப்புறம் யுக்தாவும் இதெல்லாம் கேள்விப்பட்டா சந்தோஷம் தான் படுவா.. நீ எதுக்கும் கவலைப்படாம சந்தோஷமா இரு என்ன.."

"ஆமாம்ண்ணா அண்ணி இது தெரிஞ்சா சந்தோஷப்படுவாங்கன்னு தான் இந்த நிச்சயத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன்.. அப்புறம் என்னோட நிச்சயதார்த்தத்துக்குள்ள அண்ணி வந்துடுவாங்கன்னு வேற எனக்கு நம்பிக்கை இருக்குண்ணா..."

"உன்னோட நம்பிக்கை நடந்தா சந்தோஷம் பிரணா.."

"அண்ணா உன்கிட்ட ஒன்னு சொல்லலாமா..??"

"என்ன சொல்லு..."

"அண்ணா... அண்ணி வீட்டை விட்டு போனதுக்கு நீ தான் காரணம்னு அம்மா அப்பா உன்மேல கோபமா இருக்காங்க... அண்ணி வீட்ல இருக்கவங்க.. வரூன் ஏன் இதெல்லாம் என்னால தான் நடந்துச்சுன்னாலும் எனக்கும் உன்மேல கோபம் இருந்துச்சு...

ஆனா இந்த ரெண்டுமாசத்துல நீ அண்ணியை எவ்வளவு மிஸ் பண்றன்னு உன்னை பார்த்தாலே தெரியுதுன்னா.. அண்ணா இந்த விஷயத்தையே அண்ணி தான் என்கிட்ட சொன்னாங்க... காதலை சொல்லாம மறைச்சு வச்சிருக்கறதாலேயோ... இல்ல நேரம் தவறி சொல்றதாலேயோ ஒரு ப்ரயோஜனமும் இல்லையாம்...

இவ்வளவு நாள் எப்படியோ.. ஆனா அண்ணி வந்ததுக்கு அப்புறம் இப்போ உன் மனசுல என்ன ஃபீலீங்ஸ் இருக்கோ அதை அண்ணிக்கிட்ட சொல்லிடுண்ணா.. அப்புறம் அண்ணிக்கிட்ட சொல்ல முடியாம போய்டப் போகுது... இதை என்னோட அட்வைஸா எடுத்துக்க வேண்டாம்... ஒரு ரெக்வெஸ்டா எடுத்துக்க... என்னண்ணா..??" என்று கேட்ட போது...

"உங்க அண்ணி வரட்டும் அப்புறம் இதெல்லாம் பார்த்துக்கலாம்... நீ கவலைப்படாம இரு..." என்றான்...

அவளும் சரி என்று கூறிவிட்டு செல்ல... திரும்பவும் கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான் பிருத்வி...

ஒருவேளை யுக்தா திரும்பிவந்தால் அப்போதாவது தன் மனதில் உள்ளதை பிருத்வி அவளிடம் சொல்வானா..?? முதலில் அவன் மனதில் யுக்தா மேல் உள்ள காதலை அவன் உணர்ந்துக் கொண்டானா..??

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.