'
இரண்டு மூன்று முறை திரும்ப திரும்ப படித்த பிறகே அந்த கடிதத்தில் இருந்த வார்த்தைகளின் பொருள் முழுவதுமாக புரிந்தது மற்றவர்களை விட்டு சற்று தள்ளி நின்றிருந்த ஸ்ரீதரனுக்கு.
உடனே எல்லா பெற்றவர்களுக்கும் வரும் அந்த வழக்கமான எண்ணமே வந்தது வேதாவின் அப்பாவுக்கு.
'என் பொண்ணுக்கு என்ன தெரியும்??? பாவம் அவ ஒரு குழந்தை. அவ மேலே எந்த தப்பும் இருக்காது. யார் கெடுத்தார்கள் அவள் மனதை???'
'என்னடி அப்படி பார்க்கறே? கோகுல் எப்பவுமே என் ஆளு தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ்ன்னு இந்த ஊருக்கே தெரியும். என்ன கோகுல்? அன்று கோகுலின் தோளில் கை போட்டுக்கொண்டு வேதா சொன்னது ஒரு முறை கண் முன்னே வந்து போனது அப்பாவுக்கு.
மனம் படபடத்து போனது அவருக்கு. 'என் பெண் பொய் சொல்ல மாட்டாள். அப்படி என்றால் இந்த கடிதத்தில் அவள் எழுதி வைத்திருப்பது உண்மை என்றால்... அவள் எங்கே சென்றிருக்கிறாள் என்று இந்த கோகுலுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்'
'அக்கா டெல்லி போகலை...' கண்களில் நீர் பளபளக்க கோதை சொல்ல...
'சரி டெல்லி போகலை. மும்பை போயிருப்பா... இப்போ அதுவா முக்கியம்? அவ வரும்போது வரட்டும். நீ வா...' அவசரமாக இடையில் புகுந்தான் முரளி. முரளியை பார்த்து இடம் வலமாக தலை அசைத்தாள் கோதை
'இல்ல... ப்ளீஸ்ண்ணா .... நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்...'
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
பின்னர் இரண்டு அன்னையரையும் பார்த்து சொன்னாள் அவள் 'அக்கா ஆத்தை விட்டு போயிட்டா... எங்கே போயிருக்கான்னு தெரியலை....' மெளனமாக இருவரும் கண்களை தாழ்த்திக்கொள்ள பாய்ந்தார் முரளியின் அப்பா...
'என்னது ஆத்தை விட்டு போயிட்டாளா???' அப்படின்னா ஓடிப்போயிட்டா இல்லையா???' கடுமையான குரலில் கேட்டார் அவர். 'நினைச்சேன். ஆரம்பத்திலிருந்தே ஏதோ ஒண்ணு சரியில்லைன்னு தோணிண்டே இருந்தது.'
அவரது கோப பார்வை அவளது அப்பாவின் பக்கம் திரும்ப 'அப்போ இத்தனை நாழி இந்த விஷயத்தை நீங்க எல்லாரும் எங்களண்டை மறைச்சிருக்கேள் இல்லையா???' என்றார்.
அவரது பார்வையிலும் குரலிலும் கொஞ்சம் நடுங்கித்தான் போனாள் கோதை. அவளது அப்பா மெல்ல விழி நிமிர்த்த அதற்குள் பதறியபடி சொன்னாள் கோதை.
'இல்லை... அப்பாக்கு எதுவும் தெரியாது. அவர் ரெண்டு நாளா அவர் ஊரிலேயே இல்லை. இதை நான் அவரண்ட கூட சொல்லலை. தப்பு எல்லாம் என்னோடது தான்..'
'கோதை பொண்ணு...' தவிப்புடன் அவள் அருகில் வந்தான் கோகுல். அவன் வாய் திறப்பதற்குள் அவர் கோபம் உச்சிக்கு போய்விட...
'உன்னை ரொம்ப அப்பாவி பொண்ணுன்னு நினைச்சோம். என்ன தைரியம் இருக்கணும் நோக்கு??? எத்தனை திருட்டுத்தனம் நோக்கு??? பொய் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்திண்டுடலாம்ன்னு பார்த்தியோ???' எகிறினார் நந்தகோபாலன். யசோதா அவசரமாக அவர் அருகில் வர...
'பெரியப்பா...' கொஞ்சம் சத்தமாகவே எழுந்தது கோகுலின் குரல் 'அவ பாவம் பெரியப்பா அவளுக்கு ஒண்ணும் தெரியாது...' அவன் கரம் அவள் தோள் அணைத்தது.
'அப்பா...' அவனுடன் இணைந்துக்கொண்டான் முரளி. 'ஆமாம்பா தப்பு பண்ணது நாங்க தான். முதல்லே இந்த கல்யாணம் நடந்திடட்டும் அதுக்கு அப்புறம் நாங்க எல்லா உண்மையும் சொல்றோம்..'
உள்ளுக்குள்ளே கொதிப்பேறியது ஸ்ரீதரனுக்கு 'தப்பெல்லாம் இவர்களுடையது என்றால்???
'கல்யாணமா??? நன்னா இருக்கு. ஆரம்பமே பொய், பித்தலாட்டம், பூடகம், திருட்டுத்தனம்......... இவாளோட சம்மந்தம் பண்ணிக்க சொல்றியாடா??? நம்மாத்துக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு. நான் கிளம்பறேன் ' என்றபடி வாசுதேவன் நகரப்போக
'நேக்கு திருட்டுதனமெல்லாம் தெரியாது' மெல்ல எழுந்தது கோதையின் குரல். 'உங்க எல்லார்கிட்டேயும் பொய் சொல்லவும் தோணலை. அதனாலே தான் கல்யாணத்துக்கு முன்னாடியே உண்மையை சொல்லிட்டேன்' கரைந்து நடுங்கி கிடந்த அவளது குரலில் எல்லாருமே கொஞ்சம் அடங்கி போக......... அனைவரது பார்வையும் அவள் மீதிருக்க...
'ஆனா.... நேக்கு கோ... கோகுல்ன்னா ரொம்.... ரொம்ப பிடிக்கும்.. எங்க...எங்க.... ரெண்டு பேரையும் பிரிச்சிடுவேளா???.' அவன் மீதிருந்த நேசமும் தவிப்பும் குரலில் சேர்ந்திருக்க கேட்டாள் கோதை. சடக்கென அவள் பக்கம் திரும்பியவனின் அணைப்பு இன்னமும் இறுக... அவன் கண்களிலேயே கூட கொஞ்சம் நீர் கோடுகள் தோன்ற...
கோதையின் அப்பாவை தவிர மற்ற எல்லாருமே கொஞ்சம் நெகிழ்ந்துதான் போயிருந்தனர். அவளது கெஞ்சலில் இரண்டு தந்தையரிடமிருந்த கோபமும் கூட கொஞ்சம் கரைந்திருந்தது. தேவகிக்கும், யசோதைக்கும் உள்ளம் நிரம்பித்தான் போயிருந்தது.
'ப்ளீஸ்... சித்தப்பா..இந்த கல்யாணம் நடக்கட்டுமே .' என்றான் முரளி.
'உண்மையை சொன்ன இந்த அப்பாவி பெண்ணுக்கு தண்டனை கொடுப்பது எந்த வகையில் நியாயம்???' என்ற எண்ணம் தோன்ற கொஞ்சம் கோபம் தணிந்த பார்வையுடன் நிமிர்ந்தார் வாசுதேவன்.
M | Tu | W | Th | F |
---|---|---|---|---|
TA 🎵 MM-1-OKU 🎵 |
RTT |
MM-2-AMN |
PT |
UKEKKP 🎵 MM-1-OKU 🎵 |
UKEKKP |
UANI |
CM |
UANI |
UKAN |
RTT 🎵 UKEKKP 🎵 |
MM-2-AMN |
UKAN |
TM 🎵 UKEKKP 🎵 |
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Very nice story. Romba arumaya eluthirukinga.enakku murali character romba pidichurukku .pavam pa avana jodi serthudunga.kothai and gokul love fantastic.superb pa...
story very nice ... murali suerb guy plz serthu vaithu vidunga... kothai gokul love very nicely penned suerb ma
murali sema charct. epdyathum murali vedava serthu vachurunga
gokul kothai purithal romba azhagu mam
periyavanga kovamum niyamanathu than
waiting for final epi
Murali Vetha seranum first ye soliten mam
Next enna ponnu kothai ponnu super and avaloda love ah correct ah proof panita
Gokul ku enna oru santhosam anrha kastamana nerathulalum
Sri sir ku avar oda postion ah correct ah solitenga
Periyava ellam avanga avanga point of view la pesitanga
Nalla padiya 2 marriage um nadakanum
Next Epi ku epa iruntheyr wait panuren mam
and live happily
Rukmani
Murali and vedha pair seranum becoz vedha mela iruka varuthangala yeppadi neenga murali family manasula irundhu maathi avangala onnu seakka poringanu yenaku therinjuka aarvama irukku.
ovoruthar mananilayum romba alaga solli irukeenga
இதை ஜோரான ஜூலைன்னு சொல்லலாமா ?
என்னவோ இன்னைக்கு ஒரே சந்தோஷமான மனநிலை ..
ரியல் லைஃப்ல சில சிக்கலுக்கு முடிச்சு அவிழ்த்துட்டு வந்து கதையை படிச்சா , நீங்க அதுக்கு மேல சந்தோஷத்தை கொடுத்திட்டிங்க ..
ஒவ்வொரு சூழ்நிலையையும் ரொம்ப நேர்த்தியாய் சரி பண்ணி இருக்கீங்க .. சில விஷயங்களை மனசை தொட்டது ..
1) ஸ்ரீதரன் சாரோட பொறுமை .. ஒரு தந்தையாக அவருக்கு கோபம் ,பயம் , குழப்பம்னு ஆயிரம் இருந்தாலும் , அளவுக்கு அதிகமாய் வார்த்தைகளை கொட்டிடவில்லை அவர் ...இதுவும் நல்லதுதான் ..இல்லன்னா அவரை கடைசியில் தப்பா காட்டும்படி ஆகிடுமே ..
ஒரு சிக்கல்ன்னு வந்ததும் அதை பெருசு படுத்தாலும் , சரி பண்ணனும்னு நம்புறதும் செயல் படுத்துறதும் இளையோரின் குணம் .. அது எல்லா நேரமும் சரி வருமான்னு தெரியலானாலும் , இப்போ இருக்குற வாழ்க்கை முறையில் சரியாகத்தான் இருக்கு ..(முரளி , கோகுல் , கோதை . மாயக்கண்ணன் )
அதே மாதிரி ஒரு சிக்கல் என்றதும் அதை பெரிய விஷயங்களோடு ஒப்பிட்டு டென்சன் ஆகுற பெரியவங்க .. (மூணு அப்பாக்களும் )
உடல் அளவில் திடகாத்ரமாய் ஆண் இருந்தாலும் , உளவியலில் பெண்களுக்குன்னு தனி சக்தியும் சிந்திக்கும் திறனும் பெண்களுக்கு அதிகம் .. (கோதை பொண்ணு , யசோதா , தேவகி , வேதாவும் தான் !)
கோகுலை நம்புறேன்னு சொன்னது , கோகுலின் கையை விடாமல் பிடிச்சு இருந்தது , தோள் ல கை போட்டு நின்னது .. இப்பவும் கோகுல்காக காத்திருப்பது ..எல்லாமே பேரழகு .. போதும் வத்சு ..என் கோதை பொண்ணு பாவம்ல ..அடுத்த எபிசோட் ல அவளை அழ விடாதீங்க ..
ரொம்ப அருமையான அத்தியாயம் வத்சு ..
கோதையின் அப்பா .. .அவர் இடத்தில இருந்து பார்த்தால் .. அவர் உணர்ச்சி வசப்படுவது இயல்பே...
கோதையின் கோகுல் மீதான நம்பிக்கை
இரண்டு தாய்மார்களுக்கும் புரிந்த கோகுல் கோதை உணர்வுகள், மற்ற ஆண்களுக்கு புரிவது சற்று கடினமே ..
முரளி...
வேதாவை திருமணம் செய்வானா இல்லையா என்பதை தாண்டி .. ஒரு சக மனிதனாக அவன் வேதாவை காயபடுதாமல் இயல்பாக இருந்தது பாரட்டுக்கள்..
இனி கல்யாணம்... அது கோகுல் கோதைக்கு மட்டுமா
மொத்தத்தில் படிக்க படிக்க சுவாரசியம் மற்றும் உணர்வுபூர்வமான எபிசொட் .. வத்சலா மேடம் ..
உங்கள் சந்தோஷமான final எபிசொட் க்காக காத்திருக்கிறோம்
கோகுல் - கோதை கல்யாணம் இப்போ வேண்டாம் சொன்னது கூட அழகு தான்
ஸ்ரீதரன் உணர்வுகள் புரிந்துக் கொள்ள முடிந்தது
முரளி- வேதா சேர்த்து வைச்சுடுங்கோ
இரண்டு கல்யாணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்
Appave oru yoogam irundhuchu murali vedha va pathi terinjirukumnu :)
Kodhai and kokul super jodi
Letter matter la vedha Appa kobapadama avar senjadhu nalla irumdhuchu
Amma's renduperum othukitadhu
Saravanan oda thandanai right
Murali vedha kandippa seranum
Final epi ku waiting :)
கோதை கோகுல் சீன் எல்லாம் ரொம்ப அழகு...கோதை கள்ளம்கபடமில்லாமல் பேசுவது, வெளிப்படையாக தன் அன்பை கூறுவது...கோகுல் மீது இருக்கும் தன் நம்பிக்கையில் உறுதியாக இருப்பது என மனதை கொள்ளைக் கொள்கிறாள்...
கோகுல் திருமணத்தை தள்ளி வைத்ததும் நல்ல முடிவு...
சரவணணுக்கு அந்த தண்டனை மிக தேவை..
முரளி &வேதாவை சேர்த்து வைச்சுடுங்க வத்சலா
வாசிக்கும் போதே இது இறுதி அத்தியாயமா இருக்காதுனு தோணிட்டே இருந்தது....மேரேஜ் சீன் எல்லாம் அடுத்த எபிலயா?...வாசிக்க ஆர்வமா இருக்கு...
kothai gokul very very super
murali vedhava serthu vechudunga
waiting for next epi mam