(Reading time: 23 - 46 minutes)

'ரெண்டு நாளா ஏதாவது சாப்பிட்டியாமா நீ???  ரொம்ப டல்லா இருக்கியே???' அவன் குரல் மிக இதமாக அவள் மனம் வருட சடக்கென திரும்பியவளின் கண்களில் நீர் கட்டிக்கொண்டது.

'ஏதானும் சாப்பிடறியா மா..'

'இ... இல்லை... நான் ஆத்துக்கு போறேன்.. அப்... அப்பாவை பார்க்கணும்..'

சின்ன தலை அசைப்புடன் அவன் காரை செலுத்திக்கொண்டிருக்க  'சாரி... ' என்றாள் மெல்ல. 'உங்க எல்லாரையும் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்..'

'இதமாக புன்னகைத்தான் அவன் 'நேக்கு ஒண்ணுமில்லை மா. கோகுலும் கோதையும் தான் பாவம்...' என்றவன் நடந்த எல்லாவற்றையும் சொன்னான் அவளிடம். கண்ணீர் நிற்க மறுத்தது அவளுக்கு.

'சரி விடுமா... இனிமே நடக்கவேண்டியதை பார்ப்போம்...' அவன் சொல்ல இன்னும் அதிமாக வந்தது கண்ணீர்.

சில நொடிகள் யோசித்தவன் மெல்ல கேட்டான் 'தப்பெல்லாம் இந்த கோகுல் மேலே தான் இதுக்குதான் நான் கோகுல் கிட்டே படிச்சு படிச்சு சொன்னேன். அவன் தான் கேக்கலை.'

'என்னது???"

'டேய்... வேண்டாம்டா. பொண்ணு கிட்டே என் போட்டோ காட்டதே..... அது ஓடி போயிடும்ன்னு... திரும்ப திரும்ப சொன்னேன். அவன் கேக்கலை. கொண்டு வந்து உன்னன்ண்ட காமிச்சிருக்கான். நீ ஓடி போயிட்டே...' அவன் முகத்தை படு தீவிரமாக வைத்துக்கொண்டு சொல்ல அந்த சூழ்நிலையின் அழுத்தத்தையும் மீறி கலகலவென சிரித்தே விட்டிருந்தாள் வேதா.

அவளுடன் சிரிப்பில் இணைந்துக்கொண்டவன் மெல்ல சொன்னான் 'வேதா எப்பவும் இதே மாதிரி சிரிச்சுண்டே இருக்கணும்'

நினைக்க நினைக்க உள்ளம் குமறியது அவளுக்கு 'எத்தனை பெரிய முட்டாள்தனம் செய்து விட்டேன் நான்???"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

கோதை இன்னமும் கோகுலின் நினைவிலேயே அமர்ந்திருந்தாள்.

'அடியேய்... ஆத்து மாப்பிள்ளை முதல் முதலா ஆத்து வாசலிலே வந்து நிக்கறேன். ஆரத்தி எடுக்காம அச்சச்சோங்கறே? முன்பு ஒரு முறை எதிர்பாராத நேரத்தில் வந்து நின்றானே அது போல் இப்போது வந்து நிற்பானோ????

அவள் நினைத்து முடிக்க ஒலித்தது அழைப்பு மணி. வாசலை நோக்கி ஓடினாள் கோதை!!! ஆனால் அங்கே நின்றிருந்தது கோகுல் இல்லை.!!!

மை டியர் ஃபிரண்ட்ஸ். இந்த வாரத்தோட கதையை முடிச்சிடலாம்ன்னு நினைத்தேன். முடியவில்லை. இன்னும் கல்யாண எபிசோட் மட்டும் பாக்கி இருக்கு. அதை முடிந்தால் சீக்கிரமே கொடுத்திட்டு நாம பூவிலே தேன் தேட போவோம் ;-) அதுக்குள்ளே இன்னொரு யோசனை. வேதாவையும் - முரளியையும் சேர்த்து வைப்போமா வேண்டாமான்னு. உங்களுக்கெல்லாம் என்ன தோணுது??? பிளீஸ் சொல்லுங்களேன். ;-)

சீக்கிரம் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். Thanks a lot.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெரும்..

Episode # 13

Episode # 15

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.