அதற்குள் அவர்களின் கணவன்மார்கள் தங்கைகள் இருவரையும் கண்டிக்க, பிரயுவோ அதையும் உணர்ச்சியற்ற முகத்தோடு பார்த்து விட்டு, ஐ.சி.யூ விற்குள் சென்று விட்டாள்.
டாக்டர்களிடம் கேட்க, அவர்கள் மைல்ட் அட்டாக் மாதிரி தான்.. சற்று கவனமாக பார்த்துக் கொள்ள சொன்னார்கள். பிரயுவே டாக்டர்களிடம் பேச, மற்றவர்கள் கேட்டார்கள்,
இரண்டு நாட்கள் observation இல் இருக்க வேண்டும் என்று விட்டு சென்றார்கள்.
பிரயுவும் அவள் அம்மாவும் hospitalil இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மற்ற இருவருக்கும் கை குழந்தைகள் இருப்பதால் அவர்களை அனுப்பி வைத்தார்கள். ஆதி இரவு தங்குவதாக கூற, பிரயுவோ அவனை வீட்டில் சென்று ரெஸ்ட் எடுக்க சொன்னாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
ஆபத்து கட்டத்தை நீங்கிய பிறகு, எல்லோருமே சற்று இலகுவாக இருக்க. ப்ரயு மட்டும் இறுக்கமாகவே இருந்தாள்.
பிரயுவின் அம்மா கூட , இரவு உறங்கி விட ப்ரயு உறங்க வில்லை. இரண்டு நாட்கள் hospital வாசம் முடித்து வீட்டில் கொண்டு விட பிரயுவும் வரவே, எல்லோரும் வியந்தனர்.
ஆதி அவர்கள் வியப்பிற்கு காரணம் கேட்க, கிட்டத்தட்ட ப்ரயு அவள் பெற்றோர் வீட்டிற்கு ஏழெட்டு மாதங்களாக வருவதில்லை என , ஆதிக்கு இன்னும் திகைப்பாக இருந்தது.
ஆதிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அவனோடு பேசுவதை நிறுத்தியும் அத்தனை நாட்கள் தான் ஆகியது.
என்ன ஆயிற்று அவளுக்கு அந்த நேரத்தில் .. ? இதை அவளிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியபடி இருக்க.. பிரயுவோ அவள் அப்பா வீட்டில் வைத்து,
“ஆதிப்பா.. நான் ஒரு நாலு நாள் இங்கே இருக்கவா ?” என்று வினவ,
ஆதிக்கோ அவன் காதுகளை நம்ப முடியவில்லை. அவள் அப்படி கூப்பிட்டு வருடம் ஆக போகிறது என்று எண்ணியவனாக,
“சரி .ரதிம்மா “ என்றான்.
நாலு நாட்கள் கழித்து , அவளிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று ஆதி எண்ணியிருக்க, அதற்குள் ப்ரயு மயங்கி விழுந்து கண் திறக்காமல் hospital இல் இருந்தாள்.
தொடரும்
{kunena_discuss:948}