(Reading time: 11 - 22 minutes)

மாமா பின்னுறார்டீ…”

“ஆமா காயூ… எப்படியும் போனோட விலை பத்தாயிரத்தை தாண்டியிக்கும்…”

“சரியா சொன்ன வித்யா…”

“கொஞ்சம் சும்மா இருங்கடி…” என இருவரையும் அடக்கினாள் சரயூ…

“எங்ககிட்ட சும்மா பேசாத… பாவம் போனை வாங்கி கொடுத்தவருக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லணும்னு உனக்கு தோணுதா?...” என வித்யா கோபம் கொள்ள,

“இல்ல வித்யா… நான் அவர்கிட்ட எப்படி பேச?.. எல்லாரும் இருக்குறாங்களே…?..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“இது நல்லா இருக்கே… எல்லாரும் இருக்குறப்போ தான மாமா உங்கிட்ட கிஃப்ட் கொடுத்தார்…” என காயத்ரி சொல்ல வித்யாவும் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்…

“இப்போ நான் என்னடி செய்யணும்?...” என பாவமாக கேட்ட சரயூவிடம்,

“அப்படி கேளு… இப்போ நீ என்ன செய்யணும்னா…” என வித்யா சொல்ல ஆரம்பிக்கும்போது,

“மேடம்… கொஞ்சம் பொண்ணை மாப்பிள்ளை பக்கத்துல நிற்க வைக்கிறீங்களா?...” என்ற போட்டோகிராஃபரின் குரலில் கலைந்தவள்,

“இது தான் சமயம்… மாப்பிள்ளை பக்கத்துல நிற்கும்போது தேங்க்ஸ் சொல்லிடு…. என்ன?...” என சரயூவின் காதிற்குள் வித்யாவும், காயத்ரியும் ரகசியம் பேசி அனுப்ப,

சரயூவையும், திலீப்பையும் பார்த்த போட்டோகிராஃபர், சரயூவின் உயரம் சற்றே கம்மியாக தெரிவது போல் தோன்ற அதை அவர்களிடத்தில் கூறினார்…

“அதெல்லாம் எங்க சரயூ ஹைட் தான்… புடவை, மாலை, நகைன்னு இருக்குறதால அதோட வெயிட் அவளை கொஞ்சம் குனிய வைக்குது… அதான் உங்களுக்கு ஹைட் குறைவோன்னு தெரியுது…” என காயத்ரி விட்டுகொடுக்காது சொல்ல,

கடைசியில் அந்த போட்டோகிராஃபர் சொன்னது தான் நிஜம் என்றாகி போனது…

எடுத்த சில போட்டோவையும் அவன் அவளிடம் காண்பிக்க, அவளுக்கும் சரயூ திலீப்பை விட உயரம் ரொம்ப குறைவு தானோ என்று தோன்ற வைத்தது…

அந்த நேரத்தில் வித்யாவின் யோசனை ஒன்று அதற்கு உதவியது…

ஆனால் அதை வைத்து சரயூவை அவர்கள் விடாது திருமணம் வரை கலாய்த்தது ஒரு தனி கதை என்றே சொல்லலாம்…

“இங்க பாருங்கம்மா… ஆங்… இந்த பக்கம்… கொஞ்சம் லைட்டா திரும்புங்க…” என ஒவ்வொன்றாக சொல்ல சரயூவிற்கு போதும் போதும் என்றானது…

“மேடம்… நீங்க அதை இங்க வைங்க… அப்போதான் சரியா இருக்கும்…” என அவனும் சொல்ல, வித்யா அதனை கொண்டு வந்து சரயூவின் அருகே வைத்தாள்…

அதனை பார்த்ததும் திலீப் சிரித்துவிட, அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது…

அவன் தன் சிரிப்பை அடக்குவது தெரிந்து அவன் முகத்தினையே அவள் பார்க்க,

அவன் சாரி… சாரி… என்பது போன்ற பார்வையை அவள் நோக்கி வீச, அதை அழகாய் படம்பிடித்துக்கொண்டான் அந்த போட்டோகிராஃபர்…

அருகருகே அவர்கள் இருவரையும் நிற்க சொல்ல, சரயூ, திலீப்பை பார்க்க, அவன் ஹ்ம்ம்… என்பது போல் கை காட்ட,

“இன்னும் என்னடி யோசனை?... மெனக்கெட்டு கொண்டு வந்து நான் போட்டிருக்கேன்… நீ என்னடான்னா யோசிச்சிட்டிருக்குற?...”

“இல்ல வித்யா…. அது வந்து…” என்று இழுத்த சரயூவை,

“என்ன வந்து போயி,…. சீக்கிரம்டீ… யாராச்சும் பார்த்து தொலைச்சிடப்போறாங்க… யாரும் பார்க்குறதுக்கு முன்னாடி இதை கொண்டு போய் எடுத்த இடத்துல வைக்கணும் நாங்க… ஹ்ம்ம்… சீக்கிரம்…” என காயத்ரியும் சொல்ல,

“இதுல போய் எப்படிடீ?.. கண்டிப்பா அப்படி ஒரு போட்டோ எடுக்கணுமா?... ஒன்னும் வேண்டாம்.. என்னை விடுங்க…” என நகரப்போனவளின் கைப்பிடித்து தடுத்த வித்யா,

“இப்போ நீ நாங்க சொன்னபடி செய்யலை… இதை ஊர் முழுக்க தண்டோரா போட்டுடுவோம் சொல்லிட்டேன்…” என மிரட்ட, சரயூ முழித்தாள்…

“மந்தையில காணாம போன ஆடு மாதிரி என்ன லுக்கு?... சொன்னதை செய்யுடி சீக்கிரம்…” என அவளை அவர்கள் இருவரும் அவசரப்படுத்த,

“மேடம்… நேரம் ஆச்சு… எடுக்கலாமா?...” என்ற போட்டோகிராஃபரின் குரலும் வர,

“இதோ பாருடி… பாவம் அந்த ஆள்… அவனும் போட்டோ எடுத்துட்டு சாப்பிட போக வேண்டாமா?.. அவனுக்கும் பசிக்கும்டீ.. வந்திருந்தவங்க எல்லாரும் சாப்பிட போயிட்டாங்க… மிச்சம் இருக்குறது நீ, நான், காயூ, மாமா, அப்புறம் இந்த ஆள்…” என்று வித்யா எடுத்து சொல்ல,

வேறு வழியில்லாது, சரி என்று சிரித்துக்கொண்டே அவள் நகர, திலீப்பின் பார்வை அவளை பின் தொடர்ந்தது அழகாய்…

அவனை பார்த்து பாதி முறைப்பும், பாதி வெட்கமுமாய், அந்த செங்கல்லின் மீது ஏறி நின்றாள் சரயூ……

இப்போது அவர்கள் இருவரின் உயரமும் அழகாக பொருந்த, அதை அழகாக படமாக பிடித்தான் அந்த போட்டோகிராஃபர்……

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.