(Reading time: 19 - 37 minutes)

உந்தன் கை விரல் பிடிக்கையில்

புதிதாய் நம்பிக்கை பிறக்குது
உந்தன் கூட நடக்கையில்
ஒன்பதாம் திசையும் திறக்குது
என் பயணத்தில் எல்லாம் நீ
கைக்காட்டி மரமாய் முளைத்தாய்
என் மனதை உழுது
நீ நல்ல விதைகளை விதைத்தாய்
என்னை நானே செதுக்க
நீ உன்னையே உளியாய் தந்தாய்
என் பலம் என்னவென்று எனக்கு
நீ இன்றுதான் உணர வைத்தாய்

பைரவி, மதுவின் வாழ்க்கையில் நம்பிக்கையை விதைத்தவன் முரளி என்றால் மதுவின் முகத்தில் புன்னகை பூக்க வைத்தவள் பைரவி.

யாரும் இல்லாமல் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவள். இந்த பள்ளியை தொடங்கியவுடன் அதில் மதுவால் முதலில் வேலைக்கு அமர்த்தப்பட்டவள். சிலரை கண்டவுடன் மனதிற்குள் ஒரு நெருக்கம் தோன்றும். அத்தகைய நெருக்கம் மதுவிற்கு பைரவியின் மேல் தோன்றியது. இருவரும் எப்போது தங்களின் அந்தரங்களை பகிரும் அளவு நெருங்கினார்கள் என்று கேட்டால் இருவருமே திருதிருவென முழிக்கத்தான் செய்வார்கள். பைரவி சில சமயம் சிரிக்க வைப்பாள். சில நேரம் மதுவையே அதட்டி வைப்பாள். ஆனால் அத்தனையிலும் மதுவின் மேல் உள்ள அக்கறையே வெளிப்படும். மதுவின் முகம் கண்டே அவளின் தேவைகளை நிறைவேற்றுபவள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

என்றோ ஒரு நாள் கடவுளை சபித்தவள் இன்று இது போல சொந்தங்களை பெற நிச்சயம் இறைவன் தன்னை ஆசிர்வதித்துள்ளான் என்றே எண்ணுகிறாள். நிச்சயம் அவளின் இந்த நம்பிக்கையையும் அவளிடம் ஊட்டியது முரளியும் பைரவியும் தான்.

மதுவின் முழு பிளாஷ் பாக்கையும் கொடுக்க நினைத்தேன். முடியவில்லை. அடுத்த எபியில் பிளாஷ் பாக் முழுவதும் வரும். தொடர்ந்து என் கதையை படித்து கருத்து கூறும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

தொடரும்

Episode 09

Episode 11

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.